India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகராட்சியில் தேர்தல் முடிந்து விட்டதால் மீண்டும் வரிவசூல் வேகத்தை தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தலைமையில் ஆலோசனை நடத்தி வரும் ஜூன் மாதம் தொடக்கம் முதல் வரி வசூலை தீவிரப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வரி பாக்கி உள்ளவர்கள் முறையாக செலுத்த ஆணையாளர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் தலைமையில் நேற்று (22.05.2024) நடைபெற்ற வாராந்திர பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் 33 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்தனர். பொது மக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் உடனடியாக விசாரணை மேற் கொண்டு மேல் நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 20ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், 2 நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு ஜூன்.5ஆம் தேதி வரை சிறைக்காவல் நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டத்திற்கு நாளை (மே.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும்
போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை என்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார். தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக 2 நாள் காவல் விசாரணையில் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் விசாரணை முடிந்து இன்று மீண்டும் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை விரகனூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவரது 10 வயது மகன் இன்று தனது நண்பர்களுடன் மதுரை வைகை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி சிறுவனின் உடலை சடலமாக மீட்டனர்.
மத்திய அரசின் சார்பாக தேசிய அளவில் வீர, தீர செயல்புரிந்தவர்களுக்கு ‘டென்சிங் நார்கே ‘ விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு நீர், நிலம் மற்றும் ஆகாயம் ஆகிய ஏதேனும் ஒன்றில் வியக்கத்தக்க சாதனை புரிந்து இருக்க வேண்டும். இந்த விருதுக்கு http://awards.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று அறிவித்துள்ளார்.
மேலூர் ஆட்டுக்குளம் ஊராட்சி உலகநாதபுரம் காலனியை சேர்ந்தவர் சமய முத்து மனைவி மலர்விழி(27). சமயமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு நபருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை இவரது மகள் கார்த்திகா(4) நேற்று பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை அருகில் உள்ள வயல் வெளி கிணற்றில் தள்ளி கொலை செய்தார் மலர்விழி. உறவினர்களின் தகவலை தொடர்ந்து மேலூர் போலீசார் அவரை இன்று கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியை புகழ்ந்து பேசிய தனது “எக்ஸ்” வலைதள பதிவை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என பதிவிட்ட நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று அந்த பதிவை தன் எக்ஸ் வலைதள பக்கத்திலிருந்து செல்லூர் ராஜூ நீக்கினார்.
Sorry, no posts matched your criteria.