Madurai

News May 27, 2024

ரூ.1 லட்சம் பரிசு தொகையை வென்ற கேரளா அணி

image

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கேரளாவை சேர்ந்த Jk அகாடமி அணி சென்னை தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கேரளா அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.

News May 27, 2024

18 ரயில் நிலையங்களில் டிக்கெட் தானியங்கி

image

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 14 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்க தானியங்கி இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கூடுதலாக திண்டுக்கல், பழனி, காரைக்குடி, இராமேஸ்வரம், ராமநாதபுரம், கல்லிடைக்குறிச்சி, மானாமதுரை, கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், புதுக்கோட்டை உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களில் வைக்க அனுமதி வழங்கி தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.

News May 27, 2024

மதுரையில் நாளை வெடிக்கும் போராட்டம்

image

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கேரளா அரசு முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவதற்கான விண்ணப்பத்தை வழங்கியுள்ளது. இதனை மத்திய அரசு நிராகரிக்க வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நாளை காலை 11 மணிக்கு மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்க குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News May 27, 2024

கேரளா அரசுக்கு எதிராக தீர்மானம்

image

மேலூர் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாய நல சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று மூவேந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளா அரசை கண்டித்தும், கேரளா அரசுக்கு மத்திய அரசு அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றி வரும் 30ல் மேலூர் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டது.

News May 27, 2024

மதுரை: விமானத்தில் செல்லும் சிறுவன் உடல்

image

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கத்தப்பட்டியில் உள்ள உருது பள்ளியில், பீகாரை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இதில் 13 வயது மாணவன், 9 வயது மாணவனை மே 24ல் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின் 13 வயது மாணவன் கைது செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பின் 9 வயது மாணவன் உடl இன்று பீகாருக்கு விமானத்தில் எடுத்து செல்லப்பட்டது.

News May 27, 2024

சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கு ஒத்திவைப்பு

image

சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் கஞ்சா இருந்ததால், கஞ்சா வழக்கு அவர் மீது பாய்ந்தது. கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் மனு கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மே 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

News May 27, 2024

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் சிறப்பு!

image

மதுரையில் உள்ள முக்கிய கோயில்களில் இந்த வண்டியூர் தெப்பக்குள மாரியம்மன் கோயிலும் ஒன்றாகும். பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் உள்ளார். மூலவராக மாரியம்மன் இருப்பதால் வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது. இங்கு தெப்பத்திருவிழா பிரபலாமன ஒன்றாகும்.

News May 27, 2024

மேலூர் அரசு கலைக் கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வு

image

மேலூர் அரசு கலைக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளை(மே 28) தொடங்கி நடைபெற உள்ளது. 2024-25ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புக்கு நாளை முதற்கட்டமாக விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவர் படை, ராணுவத்தினர் வாரிசுகள் ஆகியோருக்கு கல்லூரி வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் இன்று(மே 27) தெரிவித்துள்ளார்.

News May 27, 2024

மதுரை: மோசடி வழக்கில் சிக்கிய முக்கியப் புள்ளி

image

மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளதாக நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வீரசக்தி, கமலக்கண்ணன் உள்பட 20க்கும் மேற்பட்டோரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குநர் கம்பம் தனுஷை தேனி மாவட்டத்தில் வைத்து கைது செய்து(மே 26) மதுரை அழைத்து வந்தனர்.

News May 27, 2024

மதுரை: 6 மாதங்களுக்கு பின் சிக்கிய கொலைக் குற்றவாளிகள்

image

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆஸ்டின்பட்டியில், கட்டட வேலை பார்த்து வந்த சுபாஷ் குமார் பஸ்வான் என்ற பீஹார் தொழிலாளியை கொலை செய்து, அலைபேசியை பறித்துச் சென்றனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக சிக்காமல் தப்பி இருந்த குற்றவாளிகள் மூவர், 6 மாதங்களுக்கு பின் நேற்று(மே 26) போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது சிக்கினர். சங்கையா(20), சந்தோஷ்(20), வல்லரசு(22) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!