India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை பழங்காநத்தம், ஆரப்பாளையம், பெத்தானியாபுரம், செல்லுார் பகுதிகளில் நேற்று சில டெப்போக்களில் நுகர்வோர்கள் அதிகம் வாங்கும் அரை லிட்டர் கோல்டு, டீக்கடை நடத்துவோர் வாங்கும் ‘டீ மேட்’ பாக்கெட்டுகளிலும் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கெட்டுப் போன பாக்கெட்டுகளை ஆவின் திரும்ப பெற்று, மாற்று பாக்கெட்டுகள் வழங்கியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து சட்டவிதிகளை மீறி, சிறை வரை சென்று வந்தவர் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன். மதுரையில் தனது நண்பருடன் காரில் பயணிக்கும் போது, வழக்கம்போல போக்குவரத்து விதிமுறைகளை மீறினார். போன் பேசிக்கொண்டே காரை ஓட்டி, அதை வீடியோவும் எடுத்து யூடியூபில் வெளியிட்டது என்று, விதிமுறைகளை மீறியதால், மதுரை அண்ணாநகர் போலீசார் வாசனை காருடன் கைது செய்தனர்.
தேனி குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி, ஐகோர்ட் உத்தரவை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், எனவே அவரது செயல்பாடுகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, ” இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய” ஆணையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் , வாடிப்பட்டி, உசிலம்பட்டி, பேரையூர், கள்ளிக்குடி ஆகிய 11 வட்டங்களில் ஜுன்.12 ஆம் தேதி தொடங்கி ஜுன் 25 ஆம் தேதி வரை பசலி 1433கான வருவாய் தீர்வாயம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்திரவிட்டுள்ளார்.
மதுரையில் அமைந்துள்ள வியக்க வைக்கும் தேவாலயமாக இருந்து வருகிறது புனித மேரி தேவாலயம். தந்தை கார்னியர் எனப்படும் பாதிரியாரால் சின்ன தேவாலயமாக 150 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. 1916இல் இத்தேவாலயம் விசாலமாக விரிவாக்கப்பட்டது. இந்த தேவாலயம், வியாகுல மாதா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்து ரோமாபுரி பாணி கட்டடக் கலையில் அமையப்பெற்றுள்ள இரண்டு மணி கோபுரங்கள் உள்ளன.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 25 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்த நிலையில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஆணையர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், ஒவ்வொரு ஆண்டும் மே.31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில், நிக்கோடினுக்கு அடிமையான நிலையிலிருந்து புகைபிடிப்போரில் 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும் என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர் வேல்முருகன் கூறினார்.
மதுரை, திண்டுக்கல், பழனி, காரைக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களில் முன்பதிவில்லா தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை கமிஷன் அடிப்படையில் இயக்க ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை sr.indianrailways.gov.in அறியலாம்
மதுரை, திருமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு வருகிற ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது.
கல்லூரி வளாகத்தில் முதல் பொது கலந்தாய்வு வருகிற ஜூன் 10 முதல் 15 தேதி வரையும், இரண்டாம் பொது கலந்தாய்வு ஜூன் 24 தொடங்கி 29 வரையும் நடைபெறுகிறது. கலந்தாய்வு முடிந்த பிறகு, முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்த கேள்விக்கு, ” விமான நிலைய விரிவாக்க பகுதிக்கு தேவைப்படும், 86.20 ஏக்கர் பரப்பளவில் ஈச்சனோடை அருகே உள்ள இரு நீர்ப்பிடிப்பு பகுதிகள் உட்பட 89.53 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இதுவரை ஒப்படைக்க வில்லை ” என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.