India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், நேற்று மதுரை உசிலம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை குறித்து தமிழக முதல்வரிடம் சொல்லி, மத்திய அரசிடமும், கேரள அரசிடமும் பேசி சுமூகமான தீர்வு ஏற்பட உதவி செய்வேன் எனவும், பேபி அணையை பலப்படுத்தி முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்க பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படவுள்ளது. முகாமில் தங்களது குறைகளை இரட்டை பிரதிகளில் மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு காணலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வு இணையதளம் வாயிலாக 18.10.2024 முதல் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இத்தேர்விற்கு தயாராகும் பயனாளிகள் http://agnipathvayu.cdacin என்ற இணைய முகவரியில் 08.072024 முதல் 28.07.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் மதுரை மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 18ம் தேதி பிற்பகல் 4.30 மணியளவில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை ஆவினில் நாளொன்றிற்கு சுமார் 185000 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் ஆவின் பால்,பன்னீர் ஜூலை.1 முதல் டிசம்பர் 6 வரை 6 மாதங்களுக்கு தள்ளுபடி விற்பனையில் விற்கப்படுவதாக ஆவின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி 450 மி.லி பால் ரூ.28, 150 மி.லி. பால் ரூ.10, 200 கிராம் பன்னீர் ரூ.110, 500 கிராம் பன்னீர் ரூ.275 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நீா் வளத் துறை, ஊரக வளா்ச்சித் துறையின் பராமரிப்பில் உள்ள தோ்வு செய்யப்பட்ட 787 நீா் நிலைகளிலிருந்து கட்டணமின்றி வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி பெற விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையத்தில் இன்று (05.07.2024) முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் செங்கோல் குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு MP, இப்படி பேசுவது முறையல்ல என மதுரை ஆதீனம் நேற்று கண்டித்துள்ளார். மேலும், மன்னர்கள் வரலாற்று நூல் எழுதிய சு.வெங்கடேசன் இப்படி பேசுவது வருத்தத்துக்குரியது; அவரைப் பின்னால் இருந்து யாரோ இயக்குவதுபோல் தெரிகிறது என்றார்.
மக்களவைத் தேர்தலின்போது மதுரை மாவட்டத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் பணிமாற்றம் செய்யப்பட்ட 53 காவல் ஆய்வாளர்களை மீண்டும் தாங்கள் தேர்தலுக்கு முன் பணியாற்றிய காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்து தென் மண்டல ஐஜி நேற்று(ஜூலை 4) உத்தரவிட்டுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் அவரது நீட் எதிர்ப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதுரை மாநகரில் தமிழக வெற்றிக்கழகத்தினர் பல்வேறு இடங்களில் “நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்ட அதிமுகவினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், ஊராக உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிக்கான வாய்ப்பு இருக்காதோ? என்ற அச்சத்தில் கடந்தமுறை போட்டியிட்ட பலரும் தற்போது போட்டியிட மறுப்பு தெரிவித்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.