India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமயநல்லூர் பர்மா காலனியை சேர்ந்தவர் போதும் பொண்ணு(23). தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் இவர் மாற்று ஜாதியை சேர்ந்த பாலகுமாரனை திருமணம் செய்து கொண்டார். பாலகுமாரன் தாயார் இவரை ஜாதியை குறை கூறி பேசி வந்துள்ளார். இதனால் போதும் பொண்ணு நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்டிஓ விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது. சமய நல்லூர் போலீசார் தாய் மற்றும் மகனிடம் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை செல்லூர் கண்மாயில் பொதுப்பணித்துறை சார்பில் சுமார் ரூ. 4.65 கோடி மதிப்பீட்டில் கண்மாயைச் சுற்றி வேலி மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பேவர் பிளாக் நடைபாதை, மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது 10அடி உயர மின் கம்பத்திற்கு 1/2 அடி கூட ஆழமிட்டு அடித்தளமிடாததால், ஓராண்டு முடிவதற்குள் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளது.
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த மோனிஷா என்ற பெண் வரைந்த மீனாட்சி அம்மன் ஓவியத்தை, இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது. ஓவியத்தில் சாதித்த இளம்பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மீனாட்சியம்மனின் தத்துருவ ஓவியத்தை சுமார் 35 மணி நேரத்தில் வரைந்து இச்சாதனையை படைத்துள்ளார். மேலும் இவர் ஓவியத்தின் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பங்கை ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிட்டு வருகிறார்.
மதுரை மாவட்டத்தில் மேலூர் முதல் காரைக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி வரை சுற்றுவட்டச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலை துறை புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இந்த விவரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தல்லாகுளத்தை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது வீட்டில் உள்ள தனியார் இணைய சேவை பாக்ஸ் நேற்று பழுது ஏற்பட்டதால் பழுது நீக்க அந்நிறுவனத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் இணைய சேவை பாக்ஸ்-ன் அருகே வைத்திருந்த ஒன்றரை சவரன் நகை மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணக்குமார் இணைய சேவை பழுது நீக்க வந்த அபுதாகீர், கோகுல் ஆகிய இருவர் மீது அளித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற சு.வெங்கடேசன் இன்று அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்எல்ஏ கோ.தளபதி ஆகியோருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் வரும் ஜூலை மாதம் முதல் ஸ்மார்ட் போன் ஹார்டுவேர், சி.சி.டி.வி., கேமரா குறித்த இலவச பயிற்சியளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். 8ஆம் வகுப்புக்கு மேல் படித்த 40 வயதுக்குட்பட்ட இருபாலரும் பயிற்சி பெறலாம், கூடுதல் தகவல்களுக்கு 86956 46417ல் தொடர்பு கொள்ளலாம்.
மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், அதிமுக மருத்துவரணி பொறுப்பாளருமான சரவணனின் தாயார் அங்கம்மாள் நேற்று காலமானார். இன்று அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் SDPI கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் ஆகியோர் நேரில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தனர்.
மதுரையில் வரும் ஜூன்.9ஆம் தேதி அன்று காலை பாரம்பரிய நடைபயணம் மேற்கொள்ளும் புதிய திட்டத்தை மாவட்ட சுற்றுலா துறை அறிமுகம் செய்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள், மதுரையின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள மீனாட்சியம்மன் மேற்கு கோபுரத்தில் இருந்து நந்தி சிலை, விட்டவாசல், ராயகோபுரம் வழியாக பத்து தூண், மகால் வரை அழைத்து செல்லப்பட உள்ளனர்.
மக்களவைத்த் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 வெற்றி பெற்ற நிலையில் மதுரையைச் சேர்ந்த அழகிரியின் ஆதரவாளர் ஒருவர் “இந்தியா 2024 டிஎன் சாம்பியன்ஷிப் டிஎம்கே ” என்ற பெயரில் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார்.
போஸ்டரில் “மேன் ஆஃப் தி சீரிஸ்” என்ற தலைப்பில் மு க ஸ்டாலினையும் “மேன் ஆப் தி மேட்ச்” என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலினையும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.