India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை பாண்டி கோயில், குறிஞ்சி வனம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர், நேற்று போலீசாரைப் பார்த்தவுடன் தப்பியோட முயன்றனர்.
அவர்களில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், உலகநேரி பகுதியைச் சேர்ந்த மனோகரன் (28) என்பதும், வழிப்பறியில் ஈடுபட அனைவரும் ஆயுதங்களுடன் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, மனோகரனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த வாளை பறிமுதல் செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்
மதுரை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தினமும் 100 ஏழைகளுக்கு காலை உணவு வழங்கும் ” விலையில்லா விருந்தகம் ” திறப்பு விழா, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் நாளை மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. தளபதி விலையில்லா விருந்தகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையேற்று திறந்து வைக்கிறார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7மணி வரை) மதுரை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்த முதன்மை கல்வி அதிகாரி(சி. இ. ஓ.,) கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பள்ளி திறந்த முதல் நாளில் இருந்தே அரசு, உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தவும், தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கையை 100% மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 10 ஆம் தேதி தொடங்குவதாக கல்லூரி முதல்வர் வானதி நேற்று தெரிவித்துள்ளார். 2024-25ம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 10, 12, 13 ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் தினமும் காலை 9 மணிக்கு கல்லூரி கயல் அரங்கத்தில் தொடங்கி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குநா் சண்முகசுந்தா் நேற்று(ஜூன் 7) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குரூப்-1 90 காலிப் பணியிடங்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் TNPSC குரூப்-1 தோ்வுக்கான விண்ணப்ப படிவம், ஆதாா் அட்டை, 2 கடவுச்சீட்டு புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகலாம்” என்று கூறியுள்ளார்.
“கெட்டவர்களின் கனவு தகர்வதே நல்லவர்களின் வெற்றிதான், உங்களின் 400 என்ற கனவை வாக்காளர்கள் தகர்த்ததை விட கொண்டாட வேறு என்ன விசயம் வேண்டும் பிரதமரே? என நரேந்திர மோடிக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். “குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்க்கட்சிகள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை” என மோடி தெரிவித்த கருத்திற்கு ‘X’ தளத்தில் பதில் அளித்துள்ளார்.
கெட்டவர்களின் கனவு தகர்வதே நல்லவர்களின் வெற்றி தான், உங்களின் 400 என்ற கனவை வாக்காளர்கள் தகர்த்ததை விட கொண்டாட வேறு என்ன விசயம் வேண்டும் பிரதமரே? என நரேந்திர மோடிக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். “குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்கட்சிகள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை” என மோடி தெரிவித்த கருத்திற்கு இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் மறைந்த தா.பாண்டியனுக்கு உசிலம்பட்டி அருகே மணிமண்டபம் அமைக்க அவரது உறவினர் தடை கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இன்று வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம், ” சட்டத்திற்கு புறம்பாக கட்டுமானம் மேற்கொண்டால், மீண்டும் மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
மதுரையைச் சேர்ந்த மருதுபாண்டி, நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம், ஆர்டிஐ- மூலம் சுங்கச்சாவடி குறித்து கேட்டிருந்தார். அதற்கு, ” மதுரை மண்டலத்தில் 28, சென்னை மண்டலத்தில் 31 என மொத்தம் 59 சுங்கச்சாவடிகள் தற்போது செயல்பட்டு வருகிறது.மதுரை மண்டலத்தின் கீழ் கூடுதலாக 10 சுங்கச்சாவடிகள் திறக்கப்படள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 2 புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது” என ஆணையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.