India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது. இதனிடையே மதுரையில் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அதேபோல் இன்றும் மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரியும், மதுரை நகர் பகுதியில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் வாட்டி வதைத்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்போது, மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்தவருக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று உத்தரவிட்டுள்ளார். மருத்துவ கழிவுகளை எரிக்கும்போது தீ விபத்தில் உயிரிழந்த திருச்சி கலையரசனின் குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடு வழங்ககோரிய மனுவில் உத்தரவு பிறப்பித்தார்
மதுரை சொக்கிகுளம் காஞ்சி ஸ்ரீசங்கரமடத்தில் காமாட்சி அம்பாளுக்கு தங்க கவசம் சாத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி சிறப்புரையாற்றினார். அப்போது நமது கலாச்சாரம் அனைத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும் எனவும். அதை நமது அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 17ம் தேதி பாரம்பரிய விதைத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த பாரம்பரிய விதை திருவிழாவில் பங்கேற்க இன்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனிப்பிரிவு ஆய்வாளர் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையை கண்டித்து இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வரும் 15ஆம் தேதி வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், 15ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து 9 மணி நேரம் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
புதிய முப்பெரும் சட்டங்களின் பெயர்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, இன்று மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர், மதுரை ரயில் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசிற்கு எதிராகவும், முப்பெரும் சட்டங்களின் பெயர்களை திருத்தம் செய்ததை கண்டித்தும் முழக்கமிட்டபடி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மதுரை மாநகர திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
காவேரி மணியத்தின் மனைவி ராசம்மாள் (90) இன்று அதிகாலை வயது முதிர்வால் காலமானார். அவரது மறைவையொட்டி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது, மேயர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மதுரை டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் 2 தேர்வு செப்.14இல் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான மென்பாடக் குறிப்புகள் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளதால், தங்கள் சுயவிவரங்களை உள்ளீடு செய்து குறிப்புகளை பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரையில் மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில், நாளை (ஜூலை 11) முதல் இருவாரம் யோகா பயிற்சி வகுப்பு நடக்கிறது.
தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், அருகில் உள்ள டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ஹோமில் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை பெண்களுக்கான பிரத்யேக யோகா வகுப்பு நடக்கிறது.
விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.