Madurai

News June 11, 2024

மதுரை ஆதீனத்தில் தேவாரம் பயிற்சி வகுப்பு

image

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ளது ஆதினம் மடம்.
இங்கு 293வது பீடாதிபதியாக இருக்கும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், ” வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை நான்கு மணிக்கு
” தேவாரப் பயிற்சி வகுப்பு ” நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். எனவே விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News June 10, 2024

பிரேமலதா பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக உள்ளது

image

மதுரை திருநகர் எம்பி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை தழுவியதால் ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய பிரபாகரன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினர். வீடியோ கண்காணிப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்ற பிறகு சென்னையில் அமர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக உள்ளது என்றார்.

News June 10, 2024

திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்க முகாம்

image

சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் ஒரே நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் பொருட்டு மதுரை மாவட்ட சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ஜூன்.06 அன்று காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சங்கீதா இன்று தெரிவித்துள்ளார்.

News June 10, 2024

அதிகாரிகளுக்கு மேயர் அதிரடி உத்தரவு

image

மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் இன்று வழங்கினர். மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் இலவச பாடநூல் மற்றும் சீருடை ஆகியவற்றை எந்தவித குறைபாடும் இல்லாமல் வழங்கிட கல்வித்துறை அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

News June 10, 2024

தமிழகத்திற்கு மோடி நல்லது செய்வாரா-செல்லூர் ராஜூ

image

புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது “எக்ஸ்” தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து
தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்களா ? என பார்ப்போம் என்று பதிவு பேசுபொருளாகியுள்ளது.

News June 10, 2024

மதுரை: அரசு மருத்துவக்குழு சாதனை

image

மதுரை மல்லப்புரத்தைச் சேர்ந்தவர் சேகர் (68). மகாதமனி இரத்தக்குழாய் வீக்கமடைந்து வெடிக்கும் தருவாயில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கழுத்து பகுதி பைபாஸ் இருதய ஸ்டென்ட் சிகிச்சை, மகாதமனி வீக்கத்திற்கான ஸ்டென்ட் சிகிச்சை மூன்றையும், 8 மணிநேரம் வெற்றிகரமாக செய்து முதியவரின் உயிரை கைப்பற்றி மருத்துவர்கள் சாதனை படைத்தனர். 

News June 10, 2024

கோரிக்கை மனுவை பெற்ற ஆட்சியர்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக 2 மாதங்களுக்கு பின் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிடம் நேரில் சென்று மனுக்களை பெற்ற ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார்.

News June 10, 2024

இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு ஓட்டு – விமர்சனம்

image

மதுரை ஆதினம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ” நடந்து முடிந்த தேர்தலில் நரேந்திர மோடி நேற்றைய தினம் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். அதற்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள். சீமானும் அண்ணாமலையும் அதிகமான ஓட்டு வாங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள். தமிழக மக்களிடம் ஒரே ஒரு குறை தான், இலங்கைத் தமிழர்களை கொன்றவர்களுக்கு ( திமுக, காங்கிரஸ் கூட்டணி) ஓட்டு போட்டுள்ளனர்” என்றார்.

News June 10, 2024

மதுரையில் தமிழக வெற்றி கழக‌ முதல் மாநாடு!

image

மதுரையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று 550 பேருக்கு தையல் மிஷின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை த.வெ.க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றி கழக‌த்தின் முதல் மாநாடு மதுரையில் நடைப்பெற உள்ளதாக தெரிவித்த அவர், மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெறுவதாக தெரிவித்தார்.

News June 10, 2024

மதுரையில் குவிந்த மக்கள் கூட்டம்!

image

தென்மாவட்டங்களின் நுழைவாயிலாக உள்ள மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் நேற்று மாலை அலைமோதியது. கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்படுவதால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ரயில் பயணிகள் மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக அதிகளவில் பயணிகள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!