Madurai

News July 12, 2024

ஆளுங்கட்சியின் பசிக்கு காவல்துறை இரையாகி வருகிறது

image

மதுரையில் மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்வது அதிகரித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து பலத்த கேள்விகளை எழுப்புகிறது. திமுக ஆட்சியில் கொள்ளை, கொலை என்ற செய்தி வராதே நாளே இல்லை. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு உள்ளது. ஆளுங்கட்சியின் பசிக்கு காவல்துறை இரையாகி வருகிறது” என்றார்.

News July 12, 2024

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் கொலை

image

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் புகுந்து, மர்ம நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் பணியாற்றும் முத்துலட்சுமி என்ற பெண் ஊழியரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர், முத்துலட்சுமி அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்றுள்ளார். வெட்டப்பட்ட முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 12, 2024

திருவாசகம் ஒப்பித்தல் போட்டி; ரூ.25000 பரிசு

image

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராசா் கலை, அறிவியல் கல்லூரியில் வரும் 14ஆம் தேதி திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவில் திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 3 பிரிவுகளாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1 பிரிவாகவும் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.25,000 ரொக்க பரிசு வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News July 11, 2024

தெருநாய்கள் குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

image

மதுரை வழக்கறிஞர் பாலாஜி, “தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது, கட்டுப்படுத்த வேண்டும்” என்று மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை இன்று (11.7) விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சாலைகளில் திரியும் ஒட்டுமொத்த நாய்களுக்கும் கருத்தடை செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும், எத்தனை கால்நடை டாக்டர்கள் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஜூலை 16க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

News July 11, 2024

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான ‘பணியாளர் நாள்’ சிறப்பு முகாம் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற உள்ளது. எனவே பணியாளர் பணி தொடர்பான குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

38 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு-அமைச்சர்

image

மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 97 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 38,441 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போது நடைபெறும் 2ஆம் கட்ட முகாமிலும் அனைத்து மனுக்கள் மீதும் கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News July 11, 2024

மதுரையில் நாளை “முதல் பணியாளர் நாள் நிகழ்வு”

image

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான பணி தொடர்பாகவும், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை பகிர்ந்திடவும், குறைகளை தீர்வு செய்திடும் வகையில் “முதல் பணியாளர் நாள் நிகழ்வு” நாளை (12.07) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

மதுரை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி) வரை மதுரை மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News July 11, 2024

மதுரையில் 73 இடங்களில் ‘மக்களுடன் முதல்வர்’

image

மதுரை மாவட்டத்தில் 73 இடங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்கள் இன்று (ஜூலை 11) முதல் தொடங்கி, வருகிற 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். 395 கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள், 15 அரசுத் துறைகளின் மூலம் 44 சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில் இந்த முகாம்கள் நடைபெறும். முன்னதாக கடந்த டிசம்பரில் மதுரை மாவட்டத்தில் 97 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டது.

News July 11, 2024

மதுரையில் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு

image

மதுரை திருவள்ளுவர் சிலை முன்பாக நேற்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செல்வப்பெருந்தகை குறித்து அவதூறாக பேசியதற்கு ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென அண்ணாமலையின் உருவப்படத்தை தீ வைத்து எரித்ததோடு, அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். போலீசார் தடுத்த போது போலீசாருக்கும் கட்சியினருக்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

error: Content is protected !!