India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று (ஜூன் 12) தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “மதுரை மக்களவைத் தேர்தலின் வெற்றிச் சான்றிதழை நாடாளுமன்றத்தில் பதிவு செய்வதற்காக தற்போது நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்திற்கு வந்துள்ளேன் என்றும், பிரதமர் மோடியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த மதுரைத் தொகுதி வாக்காளப் பெருமக்களை வணங்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகளில், அடிக்கடி ஏற்படும் விபத்துகள் குறித்த காரண அறிக்கையை “உண்மை கண்டறியும் குழு” மதுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதில், “பட்டாசு ஆலையை மூன்றாம் நபருக்கு குத்தகைக்கு விடுவது, அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்வது, பழமையான பட்டாசு கொட்டகை, ஆபத்தான கெமிக்கலை பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கையாள்வது” போன்றவை தான் காரணம் என்று தெரிவித்துள்ளது.
மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மகன் ஹரிஷ் குமார் 17. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரி பயில்வதற்காக தயாராகி வந்த ஹரிஷ் குமார் நேற்று வீட்டின் அருகே உள்ள வேலி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த தந்தை ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.
மதுரை காந்தி மியூசிய புனரமைப்புக்கு ஏற்கனவே ரூ.6 கோடி வழங்கிய நிலையில் ரோடு, பிற பணிகளுக்காக ரூ.4 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆடிட்டோரியம், ரோடு, பாதாள சாக்கடை வசதி, குடிநீர், கழிப்பறை சீரமைப்புக்காக தற்போது கூடுதலாக ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. புனரமைப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவு பெற உள்ளது.
மதுரை மண்டலத்தின் வருமான வரி வசூல் 1% மட்டுமே உயர்ந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வருமான வரித்துறை (நாகர்கோவில் கிளை) சார்பில் நடத்தப்பட்ட ” வரி செலுத்துவோர் அவுட்ரீச் ” நிகழ்ச்சியில் பேசிய மதுரை முதன்மை வருமான வரி ஆணையர் டி.வசந்தன் இதைத் தெரிவித்தார். மேலும் வரி வசூலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மதுரை, சந்தைப்பேட்டையில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட சிறாா்கள் இருக்கின்றனா். இந்நிலையில், இங்கு இரண்டு குரூப் சிறாா்களுக்கிடையே , திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் சிசிடிவி கேமராக்கள், டிவி, ஃபேன், மேஜை, நாற்காலிகள், மின் விளக்குகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கப்பட்டது.
தற்போது, அங்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜூன்.14-க்கு ஒத்திவைத்தது உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த வழக்கு விசாரணையில் சிபிசிஐடி அதிகாரி அனில் குமார் ஆஜராகாததால் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால் பங்கேற்று பயனடைய ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 25, 26 & 27 ஆகிய நாட்களிலும், உடலியக்க குறைபாடு, காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 28ஆம் தேதியும் இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
மதுரை ஆதினம் நியமனம் குறித்து நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, புதிய ஆதினம் நியமிக்கப்பட்டார். புதிய ஆதினம் நியமனத்தை மாவட்ட நீதிமன்றமும் அங்கீகரித்தது. மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்று தரப்பும் அவகாசம் கோரியதால் விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மதுரை போடி இடையேயான 96 கி.மீ. தொலைவிற்கு கடந்த 6 மாதங்களாக மின் மயமாக்குதல் பணிகள் நடைபெற்று வந்தது. அகல ரயில் பாதை வழியாக அதற்கான மின்சார வயர்கள் தாங்கி செல்லும் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு மின்சார வயர்கள் பொருத்தப்பட்டு பணிகள் முடிந்து தற்போது தயாராக உள்ளது. எனவே விரைவில் இந்த ரயில்வே தடத்தில் மின்சார எஞ்சின் ரயில் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பயணிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.