India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகர் காவல் துறையினருக்கு மக்களவைத் தேர்தலுக்கான சிறப்பு பணி கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வழங்கப்பட்டது. இதற்கான ஊக்கத்தொகை,
மற்ற ஊர்களில் வழங்கப்பட்ட நிலையில், மதுரையில் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர். காவல்துறை வட்டாரத்தில் கூறுகையில், ” ஊக்கத்தொகை கிடைக்க, சென்னை தலைமை காவல்துறை அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் தொழில் பழகுநர் பயிற்சியில்சேர தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பொறியியல் பட்டம், பட்டயப்படிப்பு இயந்திரவியல், தானியங்கியல் ஆகிய படிப்புகளில் 2020 முதல் 2023 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளோர் ஆன்லைனில் www.boat-srp.com ல் ஜூலை.8க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மல்லிகைப்பூக்கள் வரத்து குறைவு மற்றும் கோவில் திருவிழாக்கள் மற்றும் சுபமுகூர்த்தம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தற்போது மல்லிகை பூ கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரையிலும், பிச்சிப்பூ கிலோ ரூ.500-க்கும், முல்லை கிலோ ரூ.300 முதல் ரூ.500- க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.500 முதல் ரூ.600-க்கும், தாமரைப்பூ ஒன்று ரூ.5க்கும் விற்பனையாகிறது.
மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் புத்தகம் இரவல் பெற தனிநபர், குடும்பம், மூத்த குடிமக்கள், மாணவ, மாணவியர் என 4 வகை உறுப்பினர்களுடன், நிறுவனங்கள், கல்வி நிறுவன உறுப்பினர் என புதிய வகை உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கும் , தனியார் அலுவலகங்களுக்கும் முதல்முறை உறுப்பினர் கட்டணம் ரூ.1500, ஆண்டு சந்தா ரூ.500. இவ்விருவகையிலும் 25 புத்தகங்கள் வரை இரவல் பெறலாம்.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் தொழில் பழகுநர் பயிற்சியில்சேர தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பொறியியல் பட்டம், பட்டயப்படிப்பு இயந்திரவியல், தானியங்கியல் ஆகிய படிப்புகளில் 2020 முதல் 2023 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளோர் ஆன்லைனில் www.boat-srp.com ல் ஜூலை.8க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்டமான பழைய கட்டிடத்திற்கு மீண்டும் ஆட்சியர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்ட கூடுதல் கட்டிடத்திற்கு ஆட்சியரின் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தொன்மை வாய்ந்த பழைய கட்டிடத்தை தொல்லியல் துறை மூலம் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வரும் 15ம் தேதி குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், உள்ளிட்ட குறைகள் தொடர்பாக மனுக்களை அலுவலரிடம் வழங்கி தீர்வு பெற ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்
மதுரையில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சு.வெங்கடேசனுக்கு கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இதற்கு காரணம் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் உள்ளடி வேலை பார்த்துள்ளதாக சரவணன் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் அது குறித்து கட்சி தலைமைக்கு சரவணன் தகவல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி உங்களது கருத்து என்ன..?
நெல்லையைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் விதிகளை மீறி செயல்படும் தனியார் திருமண மஹாலின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று (ஜூன் 12) அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
மதுரை மாவட்டத்தில் சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் 15 நாட்களுக்குள் மதிப்பீட்டு துணைக்குழுவிடம் தபால் மூலம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.