Madurai

News July 15, 2024

மதுரையில் காலை உணவுத் திட்டம் தொடங்கியது

image

தமிழ்நாட்டின் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், காமராஜர் பிறந்த நாளான இன்று தொடங்கப்பட்டது. மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில், ஐடி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு, முதலமைச்சரின் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து அவர்களுடன் காலை உணவை சாப்பிட்டார்.

News July 15, 2024

மதுரையில் காலை உணவு திட்டம்: மாவட்ட செயலாளர் தொடக்கம்

image

மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட காலை உணவு திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தை திருவள்ளூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மதுரையில் திமுக மாவட்ட செயலாளர் சேடபட்டி மு மணிமாறன் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி ஒன்றில் தொடங்கி வைத்த அவர், பள்ளி குழந்தைகளுக்கு உணவை ஊட்டிவிட்டு, தானும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

News July 15, 2024

கலைஞர் நூலகத்தில் 9.51 லட்சம் பேர் பயன்

image

மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள 7 தளங்களைக் கொண்ட உலகத் தரத்திலான கலைஞர் நூற்றாண்டு நூலகம், கடந்தாண்டு ஜூலை 15ஆம் தேதி திறக்கப்பட்டது. நூலகம் திறக்கப்பட்ட ஓராண்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,614 பேர் வீதம், 9.51 லட்சம் பேர் இந்நூலகத்தை பயன்படுத்தியுள்ளனர். இதில், பள்ளி மாணவர்கள் 1.13 லட்சம் பேர், கல்லூரி மாணவர்கள் 17,823 பேர், வெளிநாட்டவர் 173 பேர் பயன்பெற்றுள்ளதாக நூலக நிர்வாகம் அறிவித்துள்ளது.

News July 15, 2024

1000 பேர் பங்கேற்கும் ஆன்மீக பயணம்

image

மதுரை மாவட்டத்தில், ஆடி மாதத்தில் கட்டணமில்லாமல் ஆன்மிக பயணமாக 1000 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. ஆடி மாத ஆன்மிக பயணம் 4 கட்டங்களாக, வரும் 19ஆம் தேதி, 26ஆம் தேதி, ஆக.2ஆம் தேதி, 9ஆம் தேதிகளில் தொடங்குகிறது. இதில், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து வாய்ப்பு பெறலாம் எனவும் இந்து அறநிலைய துறையினர் தெரிவித்தனர்.

News July 15, 2024

முதல்வர் மௌனம் காக்க கூடாது: ஆர்.பி.உதயகுமார்

image

தமிழகத்திற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர்கூட தர மறுக்கும் கர்நாடகா முதலமைச்சரை, தமிழக முதலமைச்சர் கண்டிக்காமல் மௌனம் விரதம் இருந்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு இனி மௌனவிரத இருக்க கூடாது என்றும், வாயால் வடை சுடாமல் முதலமைச்சர் வாயைத் திறக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News July 15, 2024

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சியுடன் வேலை

image

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, கணிதம், வணிகக் கணிதம் ஆகிய பாடத்தில் 60% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒருவருட பயிற்சியை முடிப்பவர்களுக்கு நிரந்தர வேலை மற்றும் ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 10,000 வழங்கப்படும்.

News July 15, 2024

மதுரையில் இன்று நான் முதல்வன் தேர்வு

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், HCL நிறுவனத்துடன் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய உயர்கல்வி தேர்வு முகாமை நடத்தவுள்ளது. இதற்கான தேர்வு, மதுரையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஒருவருட பயிற்சியை முடிப்பவர்களுக்கு HCL டெக் நிறுவனத்தில் நிரந்தர வேலை மற்றும் மேற்படிப்பை தொடங்குவதற்கான வாய்ப்பை அந்நிறுவனமே வழங்குகிறது. பயிற்சியின்போது மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

News July 15, 2024

நியோமேக்ஸ்: யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்

image

மதுரை விரகனூரில் ‘நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள் முதலீட்டார்கள் நலச்சங்கம்’ என்ற கூட்டம் இன்று (14.7) நடந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிர்வாகிகள், “நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், இயக்குனர்கள் பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளனர்” என்று கூறினர்.

News July 14, 2024

செல்லூர் ராஜூ பதவி பறிக்கப்படுகிறதா?

image

மதுரை மக்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு செல்லூர் ராஜூ ஒத்துழைப்பு அளிக்காததே காரணம் என மதுரையை சேர்ந்த 2ம் கட்ட நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து கட்சி தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் செல்லூர் ராஜுவின் மாநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

News July 14, 2024

மதுரையில் காத்திருக்கும் ஆடிட்டர் பணி வாய்ப்பு

image

மதுரை ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவி குழு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உள்ளிட்ட 13 வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் கணக்குகளைத் தணிக்கை செய்ய பட்டயக் கணக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்தோர், வரும் 30ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு நேரில் (or) தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!