Madurai

News March 17, 2025

ரத்தினக்கல் வழிப்பறி செய்த 7 பேர் கைது

image

மதுரை கச்சைகட்குப் பெருமாள் நகரைச் சேர்ந்த முனியசாமி. இவர் நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் மற்றும் விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். ஜன.24 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சென்ற இவரிடம் வாகனத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் முனியசாமியை மிரட்டி ரூ.60 லட்சம் மதிப்புள்ள ரத்தினக்கல்லை பறித்துச் சென்றனர். இதில் 7 பேரை போலீசார் கைது செய்து ரத்தினக்கல்லை பத்திரமாக மீட்டனர்.

News March 17, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (16.03.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை பகிரவும்.

News March 16, 2025

மதுரையில் நியூசிலாந்து கல்வி கண்காட்சி

image

மதுரையின் இரண்டாவது நியூசிலாந்து கல்வி கண்காட்சி (Education Fair) இன்று (மார்ச்.16) மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கண்காட்சியை ரோட்டரி கவர்னர் ரோட்டரியன் ராஜா கோவிந்தசாமி துவக்கி வைத்தார். கிளப் ஆப் மதுரை, மெட்ரோ ஹெரிடேஜ், ஏ.கே. கன்சால் டென்சன், மற்றும் எஜூகேஷனல் நியூசிலாந்து அரசுடன் இணைந்து நடத்தினர். மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு களித்தனர்.

News March 16, 2025

ஜல்லிக்கட்டு காளை முட்டியதால் மாடு பிடி வீரர் உயிரிழப்பு

image

அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏது தழுவுதல் அரங்கத்தில் மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.காலை 7 மணி தொடங்கிய இந்த போட்டியில் சோழவந்தான் அருகே உள்ள கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் பாண்டி என்ற மாடுபிடி வீரர் களத்தில் ஜல்லிக்கட்டு காளை மார்பில் குத்தியதில் பலத்த காயமடைந்த நிலையில்.சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 16, 2025

பி.எம்.கிசான் கவுரவ நிதி பெறுவது நிறுத்தம் – மதுரை ஆட்சியர்

image

விவசாயிகள் உடனடியாக அடையாள எண் பெற தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் கவுரவ நிதி பெறுவது நிறுத்தம் செய்யப்படும். மேலும், விவசாயம் சார்ந்த 14 துறைகளில் திட்ட மானிய சலுகைகளையும் பெற முடியாது. மத்திய அரசு உத்தரவுப்படி பி.எம்.கிசான் 20வது தவணை பெற்றிட மத்திய அரசு வழங்கும் அடையாள எண் பெறுவது மிகவும் அவசியமாகும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

News March 16, 2025

ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும் அதிசய கோவில்

image

மீனாட்சியம்மன் கோவிலில் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய சுவாரசியமான கோவில்களில் ஒன்றுதான் பாதாள குபேரபைரவர் கோவில். இந்த கோவிலின் சன்னதி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும். அதாவது தினமும் வரக்கூடிய ராகு காலத்தில் மட்டுமே கோவிலின் சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது சிறப்பாகும். இது பற்றி உங்களுக்கு தெரியுமா என்பதை கமெண்ட் பண்ணுங்க.தெரியாத உங்க நண்பருக்கு SHARE பண்ணுங்க.

News March 16, 2025

12-ம் நூற்றாண்டு பெருமாள் சிற்பம்

image

மதுரை திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், மாரீஸ்வரன், கல்லூரி மாணவர் தர்மராஜா, ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கள ஆய்வு செய்தபோது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெருமாள் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இக்கோயில் பாண்டியர் காலத்தில் சிறந்த வழிபாட்டில் இருந்துள்ளதை இச்சிற்பங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம், என தெரிவித்தனர்.

News March 16, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (15.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News March 15, 2025

மதுரை : நடைப்பயிற்சி செய்தவருக்கு நேர்ந்த விபரீதம்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் கணேசன்(52), இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதால் மதுரை நரிமேடு பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இரு மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை மறு வாழ்வு மையத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இறப்பு குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை .

News March 15, 2025

மதுரைக்கு வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்

image

வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் மதுரைக்கு வரும் சிறப்பு திட்டங்கள் பின்வருமாறு:

▶️மதுரை,தூத்துக்குடியில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகம்

▶️ரூ.20 கோடியில் உசிலம்பட்டி 100 மெக்ரிட் டன் சேமிபு கிடங்கு

▶️மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3000 ஆயிரம் ஏக்கரில் மல்லி பயிர் செய்ய ஊக்குவிக்கப்படும்

error: Content is protected !!