India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தே.கல்லுப்பட்டி பேரூராட்சி அருகே அம்மாபட்டி கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியை தடை செய்ய கோரி இன்று சுமார் 11 மணியளவில் டி.கல்லுப்பட்டி காவல்நிலையம் முன்பாக அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது 2025இல் நடத்தப்படவுள்ள குரூப்-2,2A,4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறுகிறது.மேலும் விவரங்களுக்கு 96989 36868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அரசுப் பணியில் சேர்வதே லட்சியமாக வைத்திருப்போர்க்கு SHARE செய்து உதவவும்.
உணவு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க முடியாதவர்களுக்கு ‘பேரியாட்டிக் சர்ஜரி’ செய்ய டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். சென்னை ராஜிவ்காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சை உள்ள நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் துவங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. டாக்டர்கள்,நர்ஸ்கள் பயிற்சி பெற்ற நிலையில் விரைவில் துவங்கப்படவுள்ளது. உடல் எடையை குறைக்க நினைக்கும் உங்க நண்பர்களுக்கு பகிருங்கள்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்து விடும் என்பதும் சித்திரை மாதம் நடக்கும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.இப்பயிற்சி முடிந்தவுடன் தகுதியான நபர்களுக்கு,பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். தாட்கோ www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம்.
பிரபல எழுத்தாளரும் திரைப்பட நடிகரும் நாடக இயக்குனருமான மு.ராமசாமி மதுரை வந்துள்ளார். மதுரையில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ரயில் மூலம் மதுரை வந்த அவரை இலக்கியவாதிகளும் திரைப்பட ரசிகர்களும் வரவேற்றனர். இவர் பிரியாணி பிரியராக நடித்த கருப்புதுரை கேடி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்விக்கான பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ மற்றும் பட்டய படிப்பு போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை 31.03.2025 உடன் முடிவடைகிறது. இந்த சேர்க்கையானது இரண்டு பருவங்களில் நடைபெறும். 2025 இல் காலண்டர் வருடத்திற்கான சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேரடியாக கல்வி நிலையங்களில் சென்று பயில இல்லாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.
பால் உற்பத்தியாளருக்கு நேரடியாக ஊக்கத்தொகை செலுத்தும் முறையை கிராம பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலமாக செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 11ம் தேதி முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டம் நடத்த உள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மதுரையில் உள்ள ஆவினுக்கு, மாவட்டத்தின் பல கிராம சங்கங்கள் மூலம் தினமும் 1.50 லட்சம் லிட்டர் பால் அனுப்புகின்றனர்.
மதுரை கோரிப்பாளையத்திலிருந்து சிம்மக்கல், நெல்பேட்டை வழியாகச் செல்லும் வாகனங்கள் தேவா் சிலையிலிருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி சாலையில் சென்று புதிதாக கட்டுப்பட்டுள்ள இணைப்புப் பாலத்தில் ஏறி அண்ணா சிலை வழியாக செல்ல வேண்டும். கல்பாலம் சந்திப்பிலிருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி வழியாக கோரிபாளையம் பகுதிக்கு செல்ல எந்த வாகனத்துக்கும் அனுமதி இல்லை. SHARE செய்யவும்
மதுரை அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஆரப்பாளையம் முதல் அழகர்கோவில் வழியாக சிம்மக்கல் – கோரிப்பாளையம் – ரிசர்வ் லைன்- ஐயர் பங்களா- ஊமச்சிகுளம்- கடச்சனேந்தல் – கள்ளந்திரி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து ஆரப்பாளையத்திலிருந்து : 11:30 & 17:30 மணிக்கு கிளம்பும் அதேபோல் அழகர்கோவிலில் 10:15 & 16:மணிக்கு கிளம்பும் என அறிவிப்பு.அந்த பகுதியிலுள்ள உங்க நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.