Madurai

News July 17, 2024

ஜூலை 19: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் ஜூலை 19ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விவசாயம் தொடர்பான அனைத்து அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். எனவே, இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

அக்னிவீர் வாயு தேர்வுக்கு அழைப்பு

image

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய ராணுவத்தில் ‘அக்னிவீர் வாயு’ (விமானப்படை) தேர்வில் கலந்து கொள்ள வருகிற 28ஆம் தேதி வரை இணைய தளத்தில் பதிவு செய்யலாம். தேர்வு கட்டணமாக ரூ.500 ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். விவரங்களுக்கு www.agnipathvayu.cdac.in இணையதளத்தில் பார்வையிடலாம் ” என்று கூறப்பட்டுள்ளது.

News July 17, 2024

நாம் தமிழர் நிர்வாகியை கொன்ற 4 பேர் கைது

image

மதுரை மாநகர் செல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் வடக்குத் தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் இன்று காலை ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரையை சேர்ந்த பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன், பென்னி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உறவினருடன் சொத்து தகராறில் முன்விரோதம் ஏற்பட்டதன் காரணமாக கொலை நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News July 16, 2024

புதிய மகளிர் காத்திருப்பு அறை

image

மதுரை ரயில் நிலையத்தில் மகளிருக்கான பிரத்தியேக காத்திருப்பு அறை துவங்கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதியில் இரண்டாவது நுழைவாயிலில் உள்ள IRCTC நிர்வாக பிரிவு அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த காத்திருப்பு அறையில் போதுமான விளக்குகள், மின்விசிறிகள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள், தாய்மார் பாலூட்டும் அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வு வரை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

News July 16, 2024

17 முன்பதிவில்லா ரயில் பெட்டிகளுடன் சிறப்பு ரயில்

image

கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலியிலிருந்து கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்துக்கு 17 முன்பதிவில்லா ரயில் பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி – ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில்(06087), திருநெல்வேலியில் இருந்து ஜூலை 18 மற்றும் 25 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.00 மணிக்கு ஷாலிமார் சென்று சேரும்.

News July 16, 2024

சதுரகிரி கோவிலுக்கு 19ஆம் தேதி முதல் அனுமதி

image

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலுக்கு செல்ல வரும் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு

image

மதுரை திருமங்கலத்தில் நேற்று இரவு அனைத்து சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர், திடீர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையின் முடிவைப்பொறுத்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!