Madurai

News June 24, 2024

பால புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசின் பால புரஸ்கார் விருதுக்குத் தகுதியான குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பிக்கலாம். தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகளின் பெற்றோரை பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் வழங்கும் இந்த விருதுக்கு வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.

News June 24, 2024

பால புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசின் பால புரஸ்கார் விருதுக்குத் தகுதியான குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பிக்கலாம். தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகளின் பெற்றோரை பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் வழங்கும் இந்த விருதுக்கு வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.

News June 24, 2024

ஆயுஷ் கண்காட்சி – 3 கோடி வர்த்தகம்

image

மதுரை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் (MADITSSIA) நடத்திய பாரம்பரிய மற்றும் மூலிகை மருந்துகள் – ஆயுஷ் – மூன்று நாள் கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. மூன்று நாளில் சுமார் 15,000 பார்வையாளர்கள், பார்வையிட்டதுடன், ரூ.3 கோடி மதிப்புள்ள வர்த்தக விசாரணைகளும் வந்ததாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கே.ராஜமுருகன் கூறினார்.

News June 23, 2024

மதுரையில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், மதுரை உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் அழைப்பு

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நாளை தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரை பேச்சியம்மன் படித்துறை ஆறுமுக சந்தியில் அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News June 23, 2024

மதுரை: கண்காட்சியில் இலவச சிகிச்சை

image

மதுரை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கம் மற்றும் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் சார்பில் நடத்தப்படும் “பாரம்பரிய மருந்துகள்” குறித்த மூன்று நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியின், இரண்டாம் நாளான நேற்று (சனிக்கிழமை) இங்குள்ள ஸ்டால்களில் ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதிக்கான இலவச சிகிச்சையுடன் மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

News June 22, 2024

ரயில்வே துறையில் அலட்சிய போக்கு

image

ரயில்வே துறைக்கு, ஐகோர்ட் மதுரை கிளை இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. “முகம் சுளிக்கும் நிலையில் தான் ரயில் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை பெட்டிகள் தான் இணைக்கப்படுகின்றன. கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பராமரிப்பில் தொடர்ந்து அலட்சிய போக்கையே ரயில்வே துறை காட்டுகிறது ” என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

News June 22, 2024

மதுரையில் 7 மணி வரை மழை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன்.22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, மதுரை உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .

News June 22, 2024

24ம் தேதி நடக்கும் குரூப் 1 மாதிரி தேர்வுக்கு அழைப்பு

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குரூப்-1 முதல் நிலை தேர்விற்கு இலவச மாதிரி தேர்வுகள் வரும் 24, 27 ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 2 & 5 ஆம் தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

News June 22, 2024

குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் மீது புகார்

image

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிசாமி கூறியதாவது: “அலங்காநல்லூர் கூட்டுறவு ஆலைகளில் கரும்பு பதிவு செய்ய சிவகங்கை, தேனி தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அதிகாரம் இல்லை.
எனவே, பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

error: Content is protected !!