India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எப்படி கெஜ்ரிவால் சிறையில் உள்ளாரோ, அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுபான கொள்முதல் ஊழலில் சிறைக்குச் செல்வார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கொள்முதல் ஊழல் தொடர்பாக முதல்வர் உட்பட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை என்ற நடிகர் விஜய்யின் கருத்துக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கமளித்துள்ளார். மதுரையில் செய்தியர்களை சந்தித்த அவர், மாணவர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் விஜய் அப்படி பேசினார் என்றும், மற்ற எந்த உள் நோக்கமும் அதில் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயமே விற்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 28ஆம் தேதி 8 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 47 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணியாற்றியது, குறிப்பிட்ட சில பகுதிகளில் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதில் சுணக்கம் காட்டியதன் அடிப்படையில் வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை உள்ளிட்ட 5 தென் மாவட்டங்களைச் சேர்ந்த 70 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தென் மண்டல ஐ.ஜி. உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், பணி மாறுதல் வேண்டி காவல் ஆய்வாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி மதுரையில், சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்கள் என 42 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் இன்று (ஜூலை 2) பல்வேறு இடங்களில் மின் விநியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆனையூர், அனுப்பானடி, எல்லிஸ் நகர், இலந்தைக்குளம், தெப்பம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும், இந்த நேரம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், இன்று மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய முப்பெரும் சட்டங்களின் பெயர்களை திருத்தம் செய்ததை உடனே நிறுத்தி வைத்திக் கோரியும், இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய சாட்சிய சட்டம் (IEA) முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை வடமொழி தலைப்புகளில் மாற்றியதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
அயோத்தியை 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக மீண்டும் மீண்டும் சொல்லி வந்தது மதவெறி அரசியல் குறியீடு என எம்.பி. வெங்கடேசன் கடுமையாக சாடியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அயோத்தியில் 1,000 ஆண்டு இருளை நீக்கி விட்டதாக கூறிய பிரதமர் மோடி, தேர்தலுக்கு பிறகான உரையில் அயோத்தி என்ற வார்த்தையை பேசவில்லை. எனவே, வாக்களிக்கவில்லை என்றால், ராமனே ஆனாலும் பாஜக கை கழுவி விடும்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யுடன் சேர வேண்டும் என்பதற்காக சிலர் மிகப்பெரிய முயற்சி எடுப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். மதுரை அவனியாபுரத்தில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், “இதுவரை தனியாக நின்று நான் தோற்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம், இன்றைக்கு விஜய்க்கு உள் அர்த்தத்துடன் பாராட்டுக்கள் தெரிவிப்பதும், , கூட்டணி குறித்து பேசுதுமாக இருக்கிறார்கள்” என சீமானை மறைமுகமாக விமர்சித்தார்.
செப்.17ஆம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன. தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தினால்தான் இதனை தடுக்க முடியும். முழு ஒழிப்பு மாநாடு பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்” எனக் கூறினார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், மதுரை மாவட்டத்தில் இன்று (ஜூன் 30) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.