India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், இந்திய சுதந்திர போராட்ட வரலாறு தெரியாமல், சுதந்திர தினத்தில் செங்கோல் பற்றிய புரிதல் இல்லாத வெற்று விளம்பரத்திற்காக நாடாளுமன்றத்தில் செங்கோலைப் பற்றி தரக்குறைவாக பேசியுள்ளதாக வ.உ.சி இளைஞர் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சு.வெங்கடேசன் தனது கருத்தை திரும்ப பெறவில்லை என்றால், மதுரையில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எய்ம்ஸ் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பல்வேறு சமூக வலைதளங்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கல்வியை தொடர்வதில் மாணவர்கள் முழு திருப்தியுடன் உள்ளதாகவும், எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எவ்வித அரசியல் உள்நோக்கமும், எவ்வித இடையூறுமின்றி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில், பள்ளிகளுக்கிடையேயான மாநில ஐவர் கால்பந்து போட்டிகள் வரும் ஜூலை 11, 12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. நாக் – அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில், முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணியினருக்கு கோப்பை, சான்றிதழ், பதக்கங்களும், 3ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு பதக்கம், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. முன்பதிவிற்கு 9080361863 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
செங்கோல் என்பது பெண்களை அடிமைப்படுத்துவது போன்றது’ என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அண்மையில் பேசியிருந்தார். இதுகுறித்து நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை, “மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கப்பட்ட நிகழ்வில், எம்.பி. வெங்கடேசன் அதை பிடித்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். பிரதமர் செங்கோல் வைத்தால் தவறு. இவர்கள் செய்தால் சரியா? இதுதான் இவர்களின் அரசியல். இது போலி முகத்திரை” என விமர்சித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார். அப்போது அவருடன் அவரது கணவர் பொன் வசந்த் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை ஜூன் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 7, 14, 21, 28 மற்றும் மறுமார்க்கத்தில் ஜூலை 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என மதுரை கோட்டம் அறிவிப்பு
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எப்படி கெஜ்ரிவால் சிறையில் உள்ளாரோ, அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுபான கொள்முதல் ஊழலில் சிறைக்குச் செல்வார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கொள்முதல் ஊழல் தொடர்பாக முதல்வர் உட்பட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை என்ற நடிகர் விஜய்யின் கருத்துக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கமளித்துள்ளார். மதுரையில் செய்தியர்களை சந்தித்த அவர், மாணவர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் விஜய் அப்படி பேசினார் என்றும், மற்ற எந்த உள் நோக்கமும் அதில் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயமே விற்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 28ஆம் தேதி 8 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 47 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணியாற்றியது, குறிப்பிட்ட சில பகுதிகளில் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதில் சுணக்கம் காட்டியதன் அடிப்படையில் வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை உள்ளிட்ட 5 தென் மாவட்டங்களைச் சேர்ந்த 70 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தென் மண்டல ஐ.ஜி. உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், பணி மாறுதல் வேண்டி காவல் ஆய்வாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி மதுரையில், சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்கள் என 42 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.