Madurai

News March 10, 2025

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை வாராந்திர மனுநீதி நாளை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் மருத்துவம், காவல், வருவாய், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

News March 9, 2025

கீழக்கரை ஜல்லிக்கட்டில் 46 பேர் காயம்

image

மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் அருகே தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கீழக்கரையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 993 மாடுகள் களம் இறக்கப்பட்டன. அதில் 46 பேர் காயமடைந்தனர். 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

News March 9, 2025

வரும் 15ம் தேதி வாகன ஏலம்

image

மதுரை மாவட்ட போலீசாரால் பயன்படுத்தப்பட்டு 5 நான்கு சக்கர வாகனம், 4 டூவீலர்கள் மார்ச் 15ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது. நாளை மார்ச்.10 முதல் 14ம் தேதி வரை ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்களை பார்வையிடலாம்.ஏலம் எடுக்க விரும்புவோர் 15 அன்று ஆதாருடன் ரூ.5000 முன்பனம் செலுத்தி பெயர் பதிய வேண்டும். ரொம்ப நாளா கார்,பைக் வாங்கணும்னு சொல்றா உங்க நண்பருக்கு இத SHARE பன்னுங்க.

News March 8, 2025

மதுரையை ஆளும் மகளிர்

image

மதுரையை ஆண்ட மீனாட்சி என்ற பெருமைக்குரிய “தூங்கா நகரான” மதுரையில் தற்போது முக்கிய மக்கள் சேவை பணியில் மகளிர் பெருமளவில் அங்கம் வகித்த வருவது இதுவே முதல் முறையாகும். மாவட்ட ஆட்சியராக சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி, மாநகராட்சி ஆணையராக சித்ரா விஜயன், மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜன் மக்கள் சேவையில் உள்ளனர். ்

News March 8, 2025

மதுரையில் 9 போலீஸ் வாகனங்கள் பொது ஏலம்

image

மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 9 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. மார்ச்.15 அன்று காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் மார்ச்.10 அன்று  காலை 10 மணி முதல் மார்ச்.14 மாலை 5 மணி வரை மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 8, 2025

மதுரையில் சுவாமி தரிசனம் செய்த ரஜினி மகள்

image

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அழகர் மலையில் உள்ள கள்ளழகர் பெருமாள் கோவிலுக்கும் பதினெட்டாம்படி கருப்பசாமிக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா தனது கணவர் விசாகனுடன் மதுரை அழகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதில் பாஸ்கர், காமாட்சி, வைரவன், பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

News March 8, 2025

மதுரை ஆயி பூரணம்மாள் பற்றி தெரியுமா..

image

மதுரையை சேர்ந்த ஆயி பூரணம்மாள் பற்றி தெரியுமா இந்த மகளிர் தினத்தில் அவரை பற்றி தெரிந்து கொள்வது மதுரை மக்களாகிய நமக்கு பெருமை. சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆயி பூரணம்மாள் வங்கியில் சிறிய பணியில் உள்ள இவர் மதுரை அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியது. மட்டுமல்லாமல் ஒரு கிட்னியையே தானமாக கொடுத்துள்ளார். மதுரையிலிருந்து இவரை பற்றி தெரியாத உங்க நண்பர்களுக்கு பகிரவும்

News March 8, 2025

அட்டாக் பாண்டிக்கு பரோல் வழங்கிய ஐகோர்ட்

image

மதுரை கீரைத்துறை ‘அட்டாக்’ பாண்டி. கடந்த தி.மு.க., ஆட்சியில் மதுரை வேளாண் விற்பனைக்குழு தலைவராக இருந்தார். மதுரையில் ஒரு நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது சகோதரி மகனின் திருமணத்திற்கு பரோல் கோரிய நிலையில் மார்ச் 9 அதிகாலை 5:00 முதல் மாலை 5:00 மணிவரை பரோல் அனுமதித்த மதுரை ஐகோர்ட் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

News March 7, 2025

மதுரையில் பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம் 

image

மதுரை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் குறித்த குறைதீர்க்கும் முகாம் நாளை குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் புதிய ரேஷன் அட்டை பெறுதல், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற புகார்களுக்கு மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 7, 2025

வெங்காயத்தில் அழுகல் நோயை தடுக்கும் முறை

image

வெங்காயத்தில் அழுகல் நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய பயிர் பாதுகாப்பு முறைகளை மதுரை தோட்டக்கலைத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதில் ஒரு கிலோ விதைக்கு கார்பென்டசிம் 2 கிராம் அல்லது திரம் ஒரு கிலோவுக்கு 4 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். நீர் தேங்க கூடிய வயல்களில் உடனே ஊட்டச்சத்துக்காக 19:19:19 என்ற உரத்தை 1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.

error: Content is protected !!