India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மூன்றுமாவடி பகுதியில் நேற்று நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட 38 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் இன்று போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்குமுன் போராட்டம் நடைபெற்றது. இதைதொடர்ந்து 15ம் தேதி திங்கள்கிழமை ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அனைவரும் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.
மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளைச் சார்ந்த முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின் ஏப்ரல் 2024 தேர்வு முடிவுகள் இன்று 13.07.2024 வெளியிடப்பட்டன. இத்தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணைய தளத்தில் www.mkuniversity.ac.in வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடியாக தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு 49 மையங்களில் இன்று நடைபெற்றது. இதில் 14,770 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் 10,039 பேர் மட்டுமே தேர்வெழுதிய நிலையில் 4731 பேர் தேர்வு எழுத வாராமல் “ஆப்சென்ட்” ஆகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் நெல் முதல்போக பயிருக்கு ஜூலை 31க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என மதுரை வேளாண் இணை இயக்குநர் அறிவித்துள்ளார். ஒரு ஏக்கருக்கு நெல்லிற்கு ரூ.712, மக்காச்சோளத்திற்கு ரூ.588, பருத்திக்கு ரூ.200, நிலக்கடலை ரூ.530, பச்சை பயறுக்கு ரூ. 308 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோவில் கொடி கம்பத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்வாக 17 ஆம் தேதி கள்ளழகர் தங்க பல்லக்கில் எழுந்தருளல், 20 ஆம் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்வும் சிகர நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு இன்று மதியம் 1 மணி அளவில், தமிழக ஆளுநர் ரவி சென்னையில் இருந்து விமான மூலம் வருகிறார். பின் சாலை மார்க்கமாக விருதுநகர் சென்று காமராஜர் பொறியியல் கல்லூரி விழாவில் கலந்து கொள்கிறார். பின் மதுரையில் இருந்து 6.40 மணியளவில் சென்னைக்கு விமான மூலம் செல்கிறார். அவரின் வருகையை முன்னிட்டு, விமான நிலைய பகுதி, விருதுநகர் செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி துணை மேயராக கம்யூனிஸ்ட் கட்சியின் நாகராஜன் இருந்து வருகிறார். இந்நிலையில், துணை மேயர் நாகராஜனின் மனைவி செல்வராணியின் பெயரில் உள்ள வீடு, பொது இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக இன்று (12.7.24) வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு தொடர்பான நில அளவை பணிக்கு, நீதிமன்ற உத்தரவுப்படி ஆஜராக செல்வராணிக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம், கடந்த 2018ஆம் ஆண்டு தாடி வைத்திருந்ததால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, காவல் சட்ட விதிகளில் இதற்கு அனுமதி இல்லையெனக் கூறி, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மதுரையில் இன்று புதிதாக துவங்கப்பட்டுள்ள மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை (MSSH) உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பங்கேற்று திறந்து வைத்தார். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். 50 சிறப்பு பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்ட அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.