Madurai

News July 15, 2024

முதல்வர் மௌனம் காக்க கூடாது: ஆர்.பி.உதயகுமார்

image

தமிழகத்திற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர்கூட தர மறுக்கும் கர்நாடகா முதலமைச்சரை, தமிழக முதலமைச்சர் கண்டிக்காமல் மௌனம் விரதம் இருந்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு இனி மௌனவிரத இருக்க கூடாது என்றும், வாயால் வடை சுடாமல் முதலமைச்சர் வாயைத் திறக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News July 15, 2024

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சியுடன் வேலை

image

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, கணிதம், வணிகக் கணிதம் ஆகிய பாடத்தில் 60% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒருவருட பயிற்சியை முடிப்பவர்களுக்கு நிரந்தர வேலை மற்றும் ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 10,000 வழங்கப்படும்.

News July 15, 2024

மதுரையில் இன்று நான் முதல்வன் தேர்வு

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், HCL நிறுவனத்துடன் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய உயர்கல்வி தேர்வு முகாமை நடத்தவுள்ளது. இதற்கான தேர்வு, மதுரையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஒருவருட பயிற்சியை முடிப்பவர்களுக்கு HCL டெக் நிறுவனத்தில் நிரந்தர வேலை மற்றும் மேற்படிப்பை தொடங்குவதற்கான வாய்ப்பை அந்நிறுவனமே வழங்குகிறது. பயிற்சியின்போது மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

News July 15, 2024

நியோமேக்ஸ்: யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்

image

மதுரை விரகனூரில் ‘நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள் முதலீட்டார்கள் நலச்சங்கம்’ என்ற கூட்டம் இன்று (14.7) நடந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிர்வாகிகள், “நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், இயக்குனர்கள் பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளனர்” என்று கூறினர்.

News July 14, 2024

செல்லூர் ராஜூ பதவி பறிக்கப்படுகிறதா?

image

மதுரை மக்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு செல்லூர் ராஜூ ஒத்துழைப்பு அளிக்காததே காரணம் என மதுரையை சேர்ந்த 2ம் கட்ட நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து கட்சி தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் செல்லூர் ராஜுவின் மாநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

News July 14, 2024

மதுரையில் காத்திருக்கும் ஆடிட்டர் பணி வாய்ப்பு

image

மதுரை ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவி குழு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உள்ளிட்ட 13 வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் கணக்குகளைத் தணிக்கை செய்ய பட்டயக் கணக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்தோர், வரும் 30ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு நேரில் (or) தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

News July 14, 2024

மதுரையில் 33 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

image

மதுரையை தலைமையாகக் கொண்ட தென்மண்டல காவல்துறை சரக்கத்திற்கு உட்பட்ட மதுரை, சிவகங்கை, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் 33 இன்ஸ்பெக்டர்களை மாற்றம் செய்து மதுரை சரக டிஐஜி துரை(பொறுப்பு) நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் பணியிடம் மாற்றப்பட்ட மதுரை மாநகர காவல்துறையை சேர்ந்த 5 இன்ஸ்பெக்டர்கள், நெல்லை மாநகர் காவல்துறையில் இருவர் என மொத்தம் 33 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News July 14, 2024

‘தமிழ்நாட்டில் காந்தி’ நூல் மதிப்புரைக் கூட்டம்

image

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நூல் மதிப்புரை கூட்டம் நடைபெற்றது. அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமைவகித்தார். அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சி அலுவலர் ஆர்.தேவதாஸ் எழுத்தாளர் அ. ராமசாமி எழுதிய ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்னும் நூலை மதிப்புரை செய்து பேசினர். காந்தியவாதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News July 14, 2024

ஈபிஎஸ் கேட்ட கேள்விக்கு மௌனம் காத்த செல்லூர் ராஜூ

image

மதுரையில் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களையும் கேட்காத பல திட்டங்களும் செய்து கொடுத்த போதிலும், ஏன் வாக்குகளை அதிமுகவால் பெற முடியவில்லை எனவும் 3வது இடத்திற்கு ஏன் சென்றது என்பது குறித்து செல்லூர் ராஜூவிடம் தோல்வி குறித்த ஆலோசனையில் ஈபிஎஸ் கேட்டதாக சொல்லப்படுகிறது. அவரது இந்த கேள்விக்கு செல்லூர் ராஜூ மற்றும் மதுரையை சேர்ந்த பிற மாவட்ட நிர்வாகிகள் பதில் எதுவும் அளிக்காமல் மவுனம் இருந்துள்ளனர்.

News July 13, 2024

இந்து முன்னனி சேர்ந்த 38 பேர் மீது வழக்கு

image

மதுரை மூன்றுமாவடி பகுதியில் நேற்று நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட 38 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் இன்று போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!