India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிரிண்டர்’ (grindr)என்ற ஓரின சேர்க்கையாளர்கள் நட்புக்கான செயலி மூலம் தர்மபுரி குணசேகரனிடம் 34, சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த முனீஸ்வரன் 32, பழகி மதுரையில் நேரில் சந்தித்துள்ளனர். இருவரும் புனலூர் ரயிலில் சென்றபோது குணசேகரனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்து 2 தங்க மோதிரங்கள், அலைபேசி ஆகியவற்றை முனீஸ்வரன் கொள்ளையடித்து தப்பியுள்ளார். இச்செயலி மூலம் இதுபோன்ற மோசடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல்,தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி இணையவழியில் விண்ணப்பிக்கலாம். என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இந்த <
திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரிய கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ராதேவி. இவருக்கு மணிகண்டன் மற்றும் தருண் என்ற 2 செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளனர். அவர்களது மருத்துவ செலவிற்காக பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடந்தாரர்கள் தர குறைவாக பேசுவதால் தனது குழந்தைகளை கருணை கொலை செய்யுமாறு தாய் ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 22 முட்டை தூய மல்லி நெல் ஏலத்திற்கு வந்துள்ளதாக வேளாண் விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். மேலும் இந்த ஆவாரம் பூவை மொத்த விற்பனையில் வாங்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம் 9025152075/9600802823.
தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதவரை, பணியில் சேர்க்க தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய மேல்முறையீடு வழக்கில் இன்று தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும். சிபிஎஸ்இ கல்வியில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் 25.3.2025 முதல் 28.3.2025 வரை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் 25.03.05 முதல் 27.03.205 வரையிலான மூன்று நாட்கள் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 ல் நாளை (மார்ச் 11) செவ்வாய்க்கிழமை மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். எனவே இந்த மண்டலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவன அட்டவணையில் மதுரை – ஐதராபாத் சேவை நேரம் மார்ச்30 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் ஐதராபாத்தில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8:05 மணிக்கு மதுரை வருகிறது. மீண்டும் மதுரையில் இருந்து காலை 8:55க்கு புறப்பட்டு காலை 10:40 ஐதராபாத் சேரும். இந்த சேவை மார்ச் 30 முதல் ஐதராபாத்தில் இருந்து அதிகாலை 5:35க்கும், மதுரையில் இருந்து மதியம் 2:55 மணிக்கு புறப்படும்.#SHARE#
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை வாராந்திர மனுநீதி நாளை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் மருத்துவம், காவல், வருவாய், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் அருகே தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கீழக்கரையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 993 மாடுகள் களம் இறக்கப்பட்டன. அதில் 46 பேர் காயமடைந்தனர். 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.