India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலியிலிருந்து கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்துக்கு 17 முன்பதிவில்லா ரயில் பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி – ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில்(06087), திருநெல்வேலியில் இருந்து ஜூலை 18 மற்றும் 25 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.00 மணிக்கு ஷாலிமார் சென்று சேரும்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலுக்கு செல்ல வரும் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <
மதுரை திருமங்கலத்தில் நேற்று இரவு அனைத்து சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர், திடீர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையின் முடிவைப்பொறுத்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் செல்லூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் மர்ம நபர்களால் இன்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வால்லபாய் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை, மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட துரத்தி விரட்டி கொலை செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை, தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பாதை தொகுப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் ஜூலை 23 – ஜூலை 31 வரையும், நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் ஜூலை 22 – ஜூலை 31 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை வாரம் இருமுறை இயக்கப்படும் ‘தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் தொடங்க இருக்கிறது. இந்த ரயிலானது கோவை, பொள்ளாச்சி, பழனி மற்றும் மதுரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன், இந்த ரயில் சேவையை மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.
மதுரையில் விளையாட்டை மேம்படுத்தும் வகையில், 6 கோடி ரூபாய் மதிப்பில் ஒலிம்பிக் அகாடமி, 8 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை ஓடுதளம் அமைக்கப்படும் என தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது முதல்கட்டமாக 6 கோடி மதிப்பில் ஒலிம்பிக் அகாடமி அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரையில் இன்று புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மதுரை MGR பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, நாகர்கோவில், மூணார், இராமேஸ்வரம், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 26 புதிய பேருந்துகளும், 13 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் இன்று தொடங்கி வைப்பட்டது.
திருமங்கலம் – கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு வலுத்து வருவதால், ஆட்சியர் தலைமையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வரும் 18ஆம் தேதி சுங்கச்சாவடி தலைமை அலுவலர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் கேட்டுக் கொண்டதால், 18ஆம் தேதி வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.