India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாநகராட்சி மத்திய மண்டல தூய்மை பணியாளர்களை சுகாதார ஆய்வாளர் தரக்குறைவாக பேசுவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் 3 நாட்களாக நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் தவறு செய்தது உறுதியானால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உறுதி அளித்ததை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.
சிக்கந்தர்சாவடியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளை ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுநரான ஜோதிபாசுக்கும், மற்றொரு ஆட்டோ ஓட்டுநருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர், ஜோதிபாசுவை வெட்டி படுகொலை செய்தார். படுகாயமடைந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் ஆடி முதல் நாளை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள புதுமண தம்பதிகளுக்கு விருந்து வழங்கப்படும். அதன்படி இன்று ஆடி முதல் நாளை முன்னிட்டு, மதுரை மாநகரில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும் ஏராளமான பொதுமக்கள் இறைச்சிகளை வாங்கி சென்றனர். மதுரை மாநகர் பகுதியில் மட்டன் கிலோ ரூ.760க்கும், சிக்கன் கிலோ ரூ.200க்கும் விற்பனையான நிலையில், காலை முதலே இறைச்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் ஜூலை 19ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விவசாயம் தொடர்பான அனைத்து அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். எனவே, இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய ராணுவத்தில் ‘அக்னிவீர் வாயு’ (விமானப்படை) தேர்வில் கலந்து கொள்ள வருகிற 28ஆம் தேதி வரை இணைய தளத்தில் பதிவு செய்யலாம். தேர்வு கட்டணமாக ரூ.500 ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். விவரங்களுக்கு www.agnipathvayu.cdac.in இணையதளத்தில் பார்வையிடலாம் ” என்று கூறப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் செல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் வடக்குத் தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் இன்று காலை ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரையை சேர்ந்த பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன், பென்னி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உறவினருடன் சொத்து தகராறில் முன்விரோதம் ஏற்பட்டதன் காரணமாக கொலை நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் மகளிருக்கான பிரத்தியேக காத்திருப்பு அறை துவங்கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதியில் இரண்டாவது நுழைவாயிலில் உள்ள IRCTC நிர்வாக பிரிவு அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த காத்திருப்பு அறையில் போதுமான விளக்குகள், மின்விசிறிகள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள், தாய்மார் பாலூட்டும் அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வு வரை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.