India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை – சென்னை இடையே தினமும் இயக்கப்படும் மதுரை வைகை எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து கிளம்பும் இடம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கமாக சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸ்(12635), ஜூலை 23 முதல் 31ம் தேதி வரை செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என மதுரை ரயில்வே கோட்ட மண்டலம் இன்று(ஜூலை 18) அறிவித்துள்ளது.
மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையில் பணிபுரிந்த காவலர் சங்கர பாண்டியன்
கடந்த ஆண்டு ஜூலை 1ல் தெப்பக்குளத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். காவலரின் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள் (Tamil Nadu Police 2011 batch) மூலம் திரட்டப்பட்ட நிவாரண உதவி தொகை ரூ. 25,86,750-க்கான காசோலையை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவரது குடும்பத்தினரிடம் இன்று வழங்கினார்.
மதுரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியனை கொலை செய்த வழக்கில் கைதான கோகுல்கண்ணன், பென்னி, பரத் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது 3 பேரும் வைகை ஆற்றில் இறங்கி ஓட முயற்சித்ததாக கூறப்படும் நிலையில், தடுமாறி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு மூவருக்கும் மாவுக்கட்டு போடப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு எதிராக, தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு வழக்கு தாக்கல் செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது 2 மணிநேரம் திடீரென வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் திருப்தி இல்லையென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராபர்ட் புருஸ்க்கு எதிராக, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது தொடர்ந்து 2ஆம் இடத்தில் இருந்த அவர், இறுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த வெற்றியை எதிர்த்து தற்போது நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்
மின்சார கட்டணத்தில் சில பைசாக்கள் உயர்த்தி இருப்பது கசப்பு மருந்து சாப்பிடுவதைப் போல எடுத்துக் கொள்ள வேண்டி இருப்பதாக எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர் பட்ஜெட் இந்திய மக்களுக்கு அல்வா கொடுப்பதாக இருக்கும். அதற்கான முன்னோட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்திருக்கிறார் என்றார்.
விஜயவாடா – கூடூர் ரயில் பாதையில் தண்டவாள இணைப்பு பணி நடந்து வருகிறது. இதனால், மதுரையிலிருந்து சென்னை வழியாக ஹஜ்ரத் நிஜாமுதீன் வரை வாரம் இருமுறை இயக்கப்படும் சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் ரயில், மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. அதன்படி, வரும் 23ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை சென்னை எழும்பூர், ரேணிகுண்டா, எர்ரகுண்டா, நந்தியால், குண்டூர் மற்றும் கிருஷ்ணா கால்வாய் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, தனி கவனம் செலுத்தப்படும் என மதுரை ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிதாக பதவியேற்றுள்ள அவர், மதுரையில் ரவுடிகள் பட்டியல் தொடர்பாக தனி ‘செயலி’ உருவாக்கியதைப் போன்று, தென் தமிழகம் முழுவதும் பிரத்யேக செயலி உருவாக்கி ரவுடிகள் பட்டியல் தயாரித்து ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தனி கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மதுரையில் உள்ள ஆன்மிக சுற்றுலாத் தலங்களை ஒருங்கிணைத்து, அடுத்த வாரம் முதல் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் ஆடி மாத அம்மன் ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் வெட்டுடையார் காளியம்மன் கோயில், தாயமங்கலம் ராக்காயி அம்மன் கோவில், அழகர் கோயில்களை ஒருங்கிணைத்து செல்லும் ஆன்மிக சுற்றுலாவுக்கு ரூ.1,400 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.