Madurai

News July 19, 2024

சிறைத் துறையில் வேலைவாய்ப்பு

image

மதுரை மத்திய சிறை மற்றும் ராமநாதபுரம் சிறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மதுரை மத்திய சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் காலியாக உள்ள 1 நெசவு ஆசிரியர், 1 கொதிகலன் உதவியாளர் ஆகிய 2 பணியிடங்களுக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பெண்கள் கிளைச்சிறையில் காலியாக உள்ள 1 தூய்மை பணியாளர் பணியிடத்திற்கும் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News July 19, 2024

மதுரை மல்லி ரூ.800க்கு விற்பனை

image

ஆடி முதல் வெள்ளி மற்றும் பிரதோஷம் காரணமாக, மதுரையில் மல்லிகை பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த இரு வாரங்களாகவே பூக்களின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக விலை சரிந்து காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ரூ.600க்கு விற்பனையான மல்லிகை பூ, இன்று மேலும் 200 ரூபாய் அதிகரித்து 800 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

News July 19, 2024

விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் வழங்கல்

image

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வேளாண்மை கோட்டம் சார்பாக, சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளம் ஊராட்சியில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் பண்ணை கருவிகள் விவசாயிகளுக்கு நேற்று மாலை மானிய விலையில் வழங்கப்பட்டது. கடப்பாறை, மண்வெட்டி, கதிர் அரிவாள், கொத்துவாள் மற்றும் இரும்பு தட்டு அடங்கிய வேளாண்மை பண்ணை கருவிகள் வழங்கப்பட்டது. மேலும், மானிய விலையில் வழங்கும் இடு பொருட்கள் குறித்து விளக்கப்பட்டது.

News July 19, 2024

சித்திரை வீதிகளில் நாளை மின்தடை

image

மதுரை கோவில் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் சித்திரை வீதிகள் முழுவதும், கீழமாசி வீதி, தளவாய் தெரு, வடக்கு மாசி வீதி, மீனாட்சி அம்மன் கோவில் தெரு, அனுமார் கோயில் படித்துறை, வக்கீல் புதுத்தெரு, நெல்பேட்டை, ஆட்டுமந்தை பொட்டல், வடக்கு வெளி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

தூய்மை காவலர்கள் போராட்டம்

image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில், தூய்மை காவலர்களாக பணியாற்றும் தொழிலாளர்கள், மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டு நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போராட்டத்தில், தங்களுக்கு அரசாணைப்படி கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் மதுரை முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News July 19, 2024

மூதாட்டி கொலையில் திடுக்கிடும் தகவல்

image

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணியாற்றிய முத்துலட்சுமி என்ற மூதாட்டியை கொலை செய்த அதே மருத்துவமனை ஊழியர் அழகர்சாமியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மூதாட்டி ரூ.40,000 பணம் பெற்று தராமல் ஏமாற்றி வந்ததாகவும், மீண்டும் பணத்தை கேட்டபோது தரக்குறைவாக பேசியதால் சுவரில் மூதாட்டியை முட்ட வைத்து கொலை செய்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

News July 19, 2024

ஆடி தேரோட்டத்திற்கு தேர் அலங்கார பணி தீவிரம்

image

மதுரை பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தேரோட்டம் வரும் 21 ம் தேதி காலை 6:50 மணிக்கு துவங்க உள்ளது. இதற்காக தேரை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு பல்வேறு அலங்காரத்துடன் கூடிய வர்ணத் துணிகளை தேரில் சாத்தி அலங்காரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News July 18, 2024

வங்கியில் சமூக சேவை பயிற்சி..!

image

மதுரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் சமூக பயிற்சி பெற்றனர். கடந்த 2 ஆண்டு கால பயிற்சியில் வாடிக்கையாளர்களுக்கான சமூக சேவை, வாடிக்கையாளர்களை அணுகு முறை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவ மாணவியருக்கு இன்று பயிற்சி சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.

News July 18, 2024

கூட்டுறவு உதவியாளர்களுக்கு பயிற்சி

image

மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதவியாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தலைமையில் குறுகிய கால பயிற்சி, பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் முன்னிலையில் 120 உதவியாளர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!