India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுவதாக ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பாதை பராமரிப்பு காரணமாக வரும் 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் (நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் வழியாக) திருநெல்வேலி மற்றும் புனலூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 13,16 ஆகிய தேதிகளில் புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் புனலூர் மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையில், பொது மக்களின் நலன் கருதி சாலைகளில் சுற்றி திரியும் தெருநாய்களை கட்டுபடுத்த ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்குவது அவசியமாகிறது என கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நாய்களுக்கு காதில் மட்டும் ஓட்டை போட்டுவிட்டு, கருத்தடை செய்ததாக கணக்கு காட்டுவதா என தமிழக அரசை கேள்வி எழுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்றும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் நகராட்சி பகுதி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள், சிறுவர்கள், பேருந்து பயணிகள் அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றனர். நாய் தொல்லையை கட்டுப்படுத்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உரிய அறிவுரை வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை விராதனூரை சேர்ந்தவர் மணிகண்டன்(41). இவரது தாய் சரோஜாவுக்கு சொந்தமான இடம் திருமங்கலம் பகுதியில் உள்ளது. அந்த இடத்தை தனக்கு எழுதி தர வேண்டும் என கேட்டு நேற்று மணிகண்டன் தாய் சரோஜாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரோஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தாயைக் கொன்ற மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
2024-2025ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி செப், அக்டோபரில் நடைபெற உள்ளது. இதில் மதுரை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மொபைல் போன் முன்பதிவு இல்லா பயண சீட்டுகள் விற்பனை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாதத்திற்கு சுமார் 26,978 பயணிகள் மொபைல் போன் பயணிச்சீட்டுகள் மூலம் பயணம் செய்த நிலையில் அது கடந்த ஜூலையில் 68,631 ஆக உயர்ந்துள்ளது. இச்சாதனையை எட்ட காரணமாக இருந்த ஊழியர்களை மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் கணேஷ் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.
மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் ஆக.10 அன்று குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், நகல் அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு ஆகிய சேவையை பெறலாம்.
திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி – ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (06087) திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 15, 22, 29, செப்டம்பர் 5 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 09.00 மணிக்கு ஷாலிமார் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.