Madurai

News July 22, 2024

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 865 பேர் மனு

image

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 22) ஆட்சியர் சங்கீதா தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா வேண்டி 119 மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான 15 மனுக்கள், முதியோர், விதவை உள்ளிட்ட நிவாரணத்தொகை தொடர்பான 155 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 47 மனுக்கள் என மொத்தம் 865 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களுக்கு தீர்வு அளிப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.

News July 22, 2024

மக்களவை செயலகம் மன்னிப்பு கோருக – மதுரை எம்.பி

image

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இன்றைய மக்களவையில் ஆங்கிலம் அல்லது தங்களது தாய்மொழியில் பேசிய எம்.பி.க்களின் பேச்சுகளை சான்சட் டிவி அப்படியே ஒளிபரப்பாமல் ஹிந்தி மொழிமாற்றத்தை மட்டும் ஒளிபரப்பி தனது இந்தி திணிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது. இந்தி அல்லாத மொழிகளை பேசும் கோடிக்கணக்கான இந்தியர்களை அவமானப்படுத்திய செயலுக்கு மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

News July 22, 2024

“தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது”

image

தமிழக அரசின் இலவச லேப்டாப் திருடு போன வழக்கை இன்று (ஜூலை 22) விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாணவர்கள் கணினி திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் இலவச லேப்டாப் வழங்க அரசு பல கோடிகளை செலவழித்து வருகிறது. ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதுபோன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இவற்றை செயல்படுத்த நீதிமன்றம் குறுக்கே வராது என கருத்து தெரிவித்துள்ளது.

News July 22, 2024

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு – நீதிமன்றம் காட்டம்

image

2022ல் காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் பாஜகவினர் தாக்கல் செய்த மனுவை இன்று தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே கருத வேண்டும், ஒருபோதும் இதை ஏற்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News July 22, 2024

ஐஏஎஸ் அதிகாரி மனைவி தற்கொலை – சிக்கிய கடிதம்

image

மதுரையில் பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்ததாக கூறப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி சூர்யா நேற்று தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்த கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடிதத்தில், தமக்கும் பள்ளி மாணவர் கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தான் குற்றமற்றவள் என்பதை ஒருநாள் தெரியவரும், அதை தமிழக முதல்வர் மேடையில் கூற வேண்டும் என உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

News July 22, 2024

மதுரையில் 242 பேர் மீது வழக்குப்பதிவு

image

மதுரை மாநகர் பகுதியில் நேற்று இந்து முன்னணி அமைப்பினர் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவில்களை நீக்க கோரி அனுமதியின்றி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மதுரை மாநகர் தெப்பக்குளம், சுப்பிரமணியபுரம், கரிமேடு, புதூர் ஆகிய காவல் நிலையங்களில் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 242 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News July 22, 2024

இளைஞர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு

image

தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள பெரம்பூர் கேரேஜ் ஒர்க் ஷாப்பில் பணிபுரிய 1,337 பேர் அப்ரன்டீஸ் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10 ஆம் வகுப்பு அல்லது தொழிற்பயிற்சி முடித் தவர்கள் https://sr.indianrailways.in என்ற இணையதள முகவரியில் நாளை (ஜூலை.22) முதல் ஆகஸ்ட் 12 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 15 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு கிடையாது.

News July 22, 2024

வடமாடு மஞ்சுவிரட்டில் 16 பேர் காயம்

image

மதுரை சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 140 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் 17 காளைகள் களம் இறங்கி சீறிப்பாய்ந்தன.
இதில் காளைகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

News July 22, 2024

இடைநிலை ஆசிரியர் தேர்வில் 1240 பேர் பங்கேற்பு

image

தமிழகத்தில் 2768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு நேற்று (ஜூலை.21) நடைபெற்றது. இதற்கான மதுரை மாவட்டத்தில் 1,305 பேர் விண்ணப்பித்திருந்தனர். செயின்ட்மேரிஸ், நிர்மலா பள்ளி உள்ளிட்ட 4 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 1,240 பேர் எழுதிய நிலையில் 65 பேர் தேர்வு எழுதவில்லை.

News July 21, 2024

எந்த தவறும் இல்லை: திருநாவுக்கரசர்

image

மதுரையில், நடிகர் சிவாஜி சிலைக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, 2026 தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேசியதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.

error: Content is protected !!