India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரைனு சொன்னாலே அனைவருக்கு முதலா நியாபகத்துக்கு வரது ஜிகர்தண்டா தான். அப்படிப்பட்ட ஜிகர்தண்டா மதுரை மக்கள் கண்டுபிடிச்சதே இல்லனு எத்தன பெருக்கு தெரியும். ஜலாலுதீன் ஆசன்கான் தான் மதுரையை ஆண்ட முதல் சுல்தான். இவரது காலமான 14ஆம் நூற்றாண்டில் தான் ராஜபானமாக ஜிகர்தண்டா அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இது அரச குடும்பத்தவர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட பானமாக இருந்துள்ளது.
கோவை-மதுரை அணிகளுக்கு இடையேயான TNPL போட்டி நேற்று நெல்லையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, 20 ஓவர்கள் முடிவில் 163/9 ரன்கள் குவித்தது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கோவை அணி சார்பில் ஷாருக்கான் 51 ரன்களும், கௌதம் தாமரை கண்ணன் 4 விக்கெட்டுகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
மதுரை – ஸ்ரீவில்லிபுத்தூர் இடையே நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட 50 நகரா மண்டபங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. அதனை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க வேண்டும் என வக்கீல் மணிபாரதி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் கலச்சாரம், பாரம்பரியத்தை காப்பது நமது கடமை. மேண்கண்ட நகரா மண்டபங்களை சீரமைத்து 5 மாதத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நேற்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஜிகர்தண்டா படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் வில்லனாக அறிமுகம் ஆனவர் காளையன். இவரது சொந்த ஊர் வரிச்சியூர். நேற்று இரவு நடிகர் காளையன் தனியாக தனது காரில் வரிச்சூரில் இருந்து மதுரை சென்றார். அப்போது, கீழடி செக் போஸ்ட் அருகே திடீரென கார் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காளையன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை ஆட்சியர் சங்கீதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு “SEED” (Scheme for Economic Empowerment DNT’S) திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் மத்திய அரசின் இணையதளமான www.dwbanc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. நிதியமைச்சர் வழக்கமாக சொல்லும் திருக்குறள் கூட இந்த ஆண்டு இடம்பெற வில்லை. மேலும் ரூ.4 கோடி வேலை வாய்ப்பு என்று அறிவித்த நிலையில் 2014 இல் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று அறிவித்த திட்டம் இளைஞர் தலையில் இடியாக விழுந்துள்ளது என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத பட்ஜெட்டை “முன்னோக்கு நிதிநிலை அறிக்கை” என்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது “எக்ஸ்” தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜூலை 31ல் பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல…. எனவும் அண்ணாமலையை முந்த போட்டி போடும் ஆர்.என்.ரவி எனவும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மதுரை, கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மின்கட்டண உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரியாணி அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- மதுரை கோட்டத்தில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முதன்முறையாக ரயில் பெட்டியில் உணவகம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான மின்னணு ஏல ஒப்பந்த புள்ளி கோரும் அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உணவகம் நடத்துவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ள உணவக உரிமையாளர்கள் இந்த மின்னணு ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 44,228 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர் 21 இடமும், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் 61 இடமும், தாக் சேவாக் 21 என மொத்தம் 103 காலியிடங்கள் உள்ளன. எனவே தகுதியான நபர்கள் வரும் 5.8.2024 தேதிக்குள் விண்ணப்பித்து வேலை வாய்ப்பு பெற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.