Madurai

News August 15, 2024

கிராம சபையை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு

image

விராலிப்பட்டி கிராம மக்கள் தங்கள் பகுதியில் கல்குவாரி அமைக்க கூடாது என ஏற்கனவே போட்ட கிராமசபை தீர்மானத்தை மதிக்காமல் குவாரியை அமைக்க முயற்சியில் ஈடுபடும் அதிகாரிகளை கண்டித்து இன்று (ஆக 15) நடைபெற உள்ள கிராம சபையை புறக்கணிப்பதாக அறிவித்து, நேற்று நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். கடந்த 6ஆம் தேதி வாடிப்பட்டியில் நடந்த கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

News August 14, 2024

மதுரை – பீகார் இடையே சிறப்பு ரயில்

image

பயணிகளின் வசதிக்காக மதுரையிலிருந்து பீகார் மாநில முசாப்பர்பூருக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மதுரை – முஸாப்பர்பூர் ஒரு வழி சிறப்பு ரயில் (06114) மதுரையில் இருந்து ஆகஸ்ட் 18 அன்று ‌இரவு 07.05 மணிக்கு புறப்பட்டு ஆகஸ்ட் 21 அன்று அதிகாலை 02.45 மணிக்கு முஸாப்பர்பூர் சென்று சேரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News August 14, 2024

மதுரை எய்ம்ஸ் வெளியானது புதிய தகவல்

image

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் எவ்வித தடையும் இல்லாமல் நடைபெறுவதாக எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,எய்ம்ஸ் முதல்கட்ட கட்டுமான பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெறும் எனவும், கட்டுமான பணியில் எந்தவித சுணக்கம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய சுகாதாரத்துறை தேவையான நிதியை வழங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

image

மதுரையில் உள்ள 420 கிராம பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

image

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

News August 14, 2024

காவல்துறையின் கட்டுப்பாட்டில் மதுரை

image

சுதந்திர தினத்தையொட்டி மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக மதுரை விமான நிலையத்திலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மதுரை ரயில் நிலையம், பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!