India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இ.எஸ்.ஐ.சி யின் கவிதா சமகம் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் குறைதீர் கூட்டம் ஜூலை.29 இல் தத்தனேரி இ.எஸ்.ஐ.சி கிளை அலுவலகத்தில் காலை.9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ.சி காப்பீட்டாளர்கள், பயனாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என துணை மண்டல இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். SHARE IT
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை முன்னேற்றம் குறித்து தேனி சிபிசிஐடி டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கில் முன்னேற்றம் இல்லாவிட்டால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதி மற்றும் திட்டத்தின் நிலை குறித்து மக்களவையில் இன்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் தோக்கன் சாஹூ, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம் மாற்று ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். ஆனால் தமிழக அரசு அவையின்றி திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என பதிலளித்தார்.
மதுரை மாநகரில் இன்று (ஜூலை 25) பிற்பகல் முதல் வோடபோன் சேவை திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பிற்பகல் முதல் வோடபோன் சேவை நெட்வொர்க் இல்லாமல் போனதால் அழைப்பை மேற்கொள்ள முடியாமலும், இணைய சேவையை பெற முடியாமலும் பொதுமக்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இணையம் மூலமாக வோடபோன் நிறுவனத்திற்கு புகார் அளித்து வருகின்றனர்.
மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் நாளை (ஜூலை 26) நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் கலந்து தங்களது கல்வி தகுதிக்கேற்ப பணி நியமனம் பெறலாம். விரும்புவோர் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஜூலை 27ஆம் தேதி 108 வாகனத்தில் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் மருத்துவ உதவியாளருக்கு பிஎஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். ஒட்டுனர் பணிக்கு 24 வயதிலிருந்து 35 வயது வரை இருக்க வேண்டும். மேலும் ஒட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும். இதற்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலூர் சுங்கச்சாவடி தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வரும் 30ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது. திருமங்கலம் பகுதியில் முழு கடையடைப்பு, கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வந்தனர்.
மதுரை அடுத்த விக்கிரமங்கலம் வனப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, கூடுதல் ஆட்சியர் கூடுதல் மோனிகா ராணா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வனத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா உணவகங்களை அடித்து உடைத்ததோடு, மூன்றாண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தற்போது அம்மா உணவகங்கள் மீது திடீர் அக்கறை காட்டும் விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், ஈபிஎஸ் கேள்விகளுக்கு மேயரை வைத்து பதில் அளித்த நிர்வாக திறனற்ற அரசு எனவும் விமர்சித்தார்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 200 சிறுமிகள் குழந்தைகளை பெற்றுள்ளனர் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 100 நாட்களில் 194 சிறுமிகள் குழந்தைகளைப் பெற்றுள்ளனர். மேலும் பெற்றோர் நடத்தும் திருமணம், காதல் திருமணம் போக சிறார் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.