India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரம் பணிமனையில் 2 ஆம் கட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, எழும்பூர் – மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ்(12635) ஆக.1 முதல் ஆக.14 வரை செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.48 மணிக்கு புறப்படும். எழும்பூர் – திருச்சி எக்ஸ்பிரஸ்(12653)ஆக.2 முதல் ஆக.15 வரை செங்கல்பட்டில் இருந்து இரவு 12.40 க்கு புறப்படுகிறது.
விருதுநகரில் பிரசித்தி பெற்ற சதுரகிரி மலையில் ஆடி அமாவாசையையொட்டி மலைக்கு செல்ல அக.1 முதல் ஆக.14 வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுக் கூட்டம் நேற்று மதுரை, விருதுநகர் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மலை ஏற காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொடுட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதுரை வந்த இந்திய அணியின் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பிருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ரசிகர்கள் அதிகம் பார்க்கும் கிரிக்கெட் போட்டியாக டிஎன்பிஎல் மாறியுள்ளது. மீடியா முன் பேசுவதற்கே தயக்கமாக உள்ளது. பின்னர் எப்படி நான் சினிமாவில் நடிப்பேன். சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
மதுரை மாவட்டம் சக்குடியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் தமிழரசன். இவர் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய போட்டியில் தடகளத்தில் தமிழக வீரர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்தநிலையில், இவர் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி சார்பில் பங்கேற்கவுள்ளார்.
கோவையில் அண்மையில் நடந்த ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலுக்கான 49 ஆவது மாநில அளவிலான போட்டிகளில், மதுரையில் உள்ள தனியார் சர்வதேச பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். 16 தங்கம், 13 வெள்ளி, 8 வெண்கலம் என 37 பதக்கங்களை பெற்றனர். பெண்கள் தனிநபர் பிரிவில் மாணவி கபிஷ்னா 8 தங்கம் வென்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். ஆண்கள் தனிப் பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ‘டீனாக’ இருந்த ரத்தினவேலு 2 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். லோக்சபா தேர்தல் நடத்தை விதியின் காரணமாக,புதிய டீன் நியமிக்கப்படவில்லை. தற்காலிக டீனாக பேராசிரியர் தர்மராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஒன்றரை மாதமாகியும் புதிய ‘டீன்’ நியமிக்கப்படாத நிலையில் விரைவில் டீன் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கான முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணங்கள் இல்லாமல் இருப்பவர்கள் அரசு அலுவலகங்களில் இதனை ஆவணமாக பயன்படுத்த முடியும். இதில், விண்ணப்பதாரர் பெயர், முகவரி, புகைப்படம் இடம் பெற்றிருக்கும். இதனை அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் விண்ணப்பித்து பெறலாம் என மாவட்ட தபால் நிலைய முதுநிலை கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
மதுரை – மேலூர் சாலையில் உத்தங்குடி அரசு பெண்கள் மாதிரி பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள ஊரணியை புனரமைக்க கோரி தவமணி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவிற்கு கலெக்டர், தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை ஆக.1க்கு ஒத்தி வைத்தனர்.
மதுரையில் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாநகர காவல்துறை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 8 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மத்திய அரசின் ரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்வதில் தமிழக அரசு கால தாமதம் செய்வதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளதாகவும், மதுரை – தூத்துக்குடி அகல ரயில்பாதை உள்ளிட்ட திட்டங்களுக்கு 907.33 ஹெக்டர் நில எடுப்பு பணி முடிந்து ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.