Madurai

News August 17, 2024

நெல்லை – தூத்துக்குடி ரயில் சேவை ரத்து

image

பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் 4 நாட்களில் பாலருவி பாசஞ்சர் இரயில் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும்.

News August 17, 2024

மதுரையில் பரவும் வதந்தி யாரும் நம்ப வேண்டாம்

image

மதுரையில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 17.08.2024, 19.08.2024 20.08.2024 சிறப்பு முகாம் நடைபெறுவதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 17, 2024

எம்பி-யை புறக்கணித்த மதுரை மேயர்..?

image

மதுரையில் சேதமடைந்த ரோடுகளை சீரமைப்பது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் எம்.பி வெங்கடேசன் நேற்று திடீர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். எம்.பி வருகை குறித்து மேயர் இந்திராணிக்கு தகவல் தெரிவிக்காததால் அலுவலகத்திலிருந்த அவர் ஆய்வு பணிக்காக வெளியே சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டணியில் இருந்து கொண்டே மேயரிடம் தகவல் தெரிவிக்காமல் எம்பி தனி அரசியல் செய்வதாக மேயர் தரப்பில் புலம்பினர்.

News August 16, 2024

மதுரை மக்களே இதை நம்ப வேண்டாம்

image

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்களை வரும் 17, 19 20 ஆகிய மூன்று நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், எனவே பொதுமக்கள் நேரில் வந்து மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை வழங்கலாம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இத்தகவலை மறுத்துள்ள மதுரை மாவட்ட நிர்வாகம் இது தவறான தகவல் என விளக்கம் அளித்துள்ளது.

News August 16, 2024

மதுரை மெட்ரோ திட்டத்தில் சிக்கல்?

image

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு, விரிவான திட்ட அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ நிர்வாக குழு இத்திட்ட அறிக்கையில் சில மாறுதல்களை செய்ய திட்ட அறிக்கையை திரும்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மாறுதல் செய்து மீண்டும் மத்திய அரசு அனுமதி வழங்கிய பின்னர் மெட்ரோ குறித்து இறுதி முடிவு செய்யப்படும்.

News August 16, 2024

ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை, விருதுநகரில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரி வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ் தாக்கல் செய்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2024

மதுரையில் மாற்றுத்திறனாளிகளை காக்க வைத்த அதிகாரிகள்

image

மதுரை மாவட்டத்தில் உள்ள தவழும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குவதற்கான உடல் தகுதி சான்றிதழை சரிபார்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. முகாம் உரிய நேரத்தில் துவங்கப்படாமல் பல மணி நேரம் தாமதமாக துவங்கியதால் காலை 9 மணிக்கு வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் மாலை வரை பசியுடன் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.

News August 16, 2024

தலித்துகள் முதல்வராக முடியுமா? செல்லூர் ராஜூ பதில்

image

தலித்களும் முதல்வராக முடியும். அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வரே வணங்கக்கூடிய சபாநாயகர் இடத்தில் தனபால் அவர்களை அமரவைத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. அதனால் யாரும் முதல்வராக முடியும். திராவிட கட்சி வழிவந்த அதிமுகவில் ஜெயலலிதா முதல்வராக வந்தார். அவரை யாரும் சாதி பார்த்து ஓட்டுபோடவில்லை. எம்.ஜி.ஆர்., அவர்களை யாரும் சாதி பார்த்து ஓட்டுபோடவில்லை என்றார். மதுரையில் இன்று பேட்டியளித்த அவர் இதை தெரிவித்தார்.

News August 16, 2024

தென் மாவட்ட சைபர் கிரைமில் போதிய கட்டமைப்பு இல்லை – ஐகோர்ட் அதிருப்தி

image

மதுரையைச் சேர்ந்த 7 பேர், குழந்தைகள் நல மருத்துவர் பிரியா பிஸ்வா குமாரை 4.5 கோடி ஏமாற்றிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி, “தென் மண்டல சைபர் க்ரைமில் பதிவான 25,775 வழக்குகளில், ஒரு வழக்கில் மட்டும் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது. தென் மாவட்ட சைபர் க்ரைமில், சென்னையில் இருப்பதுபோல உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லை” என்று கூறினார்.

News August 16, 2024

மதுரையில் நாளை ராஜாஜி மருத்துவமனை இயங்காது

image

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நாளை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!