India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை, உசிலம்பட்டி அதிமுக நகராட்சி தலைவர் சகுந்தலாவின் மகன் விஜய், பள்ளி நடத்தி வரும் கவிதா என்பவரிடம், மேல்நிலை பள்ளி அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி, அரசு அதிகாரிகள் பெயரில், ரூ. 1 கோடியே 40 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார். கவிதா கொடுத்த புகாரின் பேரில், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சகுந்தலாவின் மகன் விஜயை கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 150 கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாநகராட்சி பில் கலெக்டர்களை ஆணையாளர் தினேஷ்குமார் ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார். கடந்த 2022, 2023 ஆம் ஆண்டில் முறைகேடு நடந்துள்ளதும், இதனால் மாநகராட்சிக்கு ரூ.1.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ராமலிங்கம், ராமச்சந்திரன், மாரியம்மாள் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிற இடமாக மதுரை துவரிமான் – மேலக்கால் சந்திப்பு உள்ளது. துவரிமான் சந்திப்பில் உயர் மட்ட மேம்பாலமும், சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டுமென மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து மதுரை எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்று பாலம் அமைக்க ரூ. 46.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம் புல்லமுத்தூர் பாபுராஜ் 29 திருவாரூர் போலீஸ்காரர் இவரது மனைவி தமிழ்ச்செல்வி 2021ல் திருமண நடந்தது. திருவாரூரில் போலீஸ் குடியிருப்பில் 2023 வரை வசித்தனர். குடும்பப் பிரச்சினையால் செந்தமிழ் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார் தன்னுடன் சேர்ந்து வாழ 5 பவுன் நகை வேண்டுமென பாபுராஜ் கேட்டதாக புகாரின் பேரில் நேற்று திருமங்கலம் மகளிர் போலீல் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
மதுரை அடுத்த பரவை ஏ.ஐ.பி.இ.ஏ. நகர் பி காலனியை சேர்ந்தவர்கள் குப்புசாமி(77)- பஞ்சவர்ணம் (72).இருவரும் தனது மகன் பாலசுந்தரத்துடன் வசித்து வந்தனர். வயதானதால் இருவரும் நோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை மோசமானதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கடிதம் எழுதி வைத்திருந்ததும் தெரியவந்தது.
திருமங்கலம், மேலூர் பகுதிகளில் ஒரு போக சாகுபடிக்கு செப்டம்பர் 15 க்கு முன்கூட்டியே வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசிற்கு பரிந்துரை செய்திட மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் திருமங்கலத்தில் 19,500 ஏக்கருக்கு, மேலூரில் 25,000 ஏக்கருக்கு பாசன வசதி பெறு முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய டிஜிட்டல் மயமாக்கலின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே, மதுரை கோட்டத்தில் 106 நிலையங்களில் 115 டிக்கெட் கவுண்டரில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்குவதற்கான QR குறியீடு கட்டண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரொக்கமில்லா பரிவர்த்தனையின் மூலம் ரயில்வே பயணிகளின் எளிமையான முறையில் டிக்கெட் பெறுவதை உறுதி செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறையினர் மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களில் 27 குளிர்பான தயாரிப்பு மற்றும் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் காலாவதியான 32 லிட்டர் குளிர்பானம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், விதியை மீறிய 10 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும், 7 கடைகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர்.
பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் 4 நாட்களில் பாலருவி பாசஞ்சர் இரயில் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.