India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை நத்தம் மேம்பாலத்தில் மொத்தம் 268 பிரம்மாண்ட தூண்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு தூணையும் வரிசைப்படுத்தி சாலையில் செல்லக்கூடிய வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியக்கூடிய வகையில் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் செல்லும் சாலையின் இரு புறமும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு சாலைகள் பிரிவதால் இதில் குறிப்பிடப்பட்ட எண்கள் மூலம் எளிதில் அடையாளம் கண்டு செல்கின்றனர்.
மதுரை தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. மதுரை தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 90 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <
மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் அரசு உயர்நிலைப்பள்ளி, மாயாண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி, அரும்பனூர் ஒன்றிய துவக்கப்பள்ளி, மதுரை கோரிப்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களுக்கு ISO தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 100 சத்துணவு கூடங்களில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 4 சத்துணவு கூடங்கள் தேர்வாகியுள்ளது பாராட்டை பெற்றுள்ளது.
மதுரை மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நாளை (ஆக.20) நடைபெற உள்ளது. எனவே மண்டலம் 3 க்குட்பட்ட வார்டு பகுதி மக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் ஆக.23 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கல்விச்சான்றிதழ்கள் (அசல் & நகல்), ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நாணயம் வெளியீடு நிகழ்ச்சி மூலம் பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக உள்ளது நிருபனமாகியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். கட்சி நிகழ்வில் பேசிய அவர், கலைஞர் நாணயத்தில் ஹிந்தி மொழி பொறிக்கப்பட்டுள்ளது. ஹிந்து ஒழிக என 75 ஆண்டுகள் முழக்கமிட்ட திமுக குரல் இன்றைக்கு சமாதி ஆக்கப்பட்டுள்ளது. இனி ஹிந்தி ஒழிக என்று திமுக கோஷம் போட்டால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் சிபிஎஸ்இ மற்றும் மாநில பள்ளிகளில், 3000 தகுதியுள்ள SC மாணவர்கள் ஸ்ரேஸ்டா (NETS) என்ற தேசிய நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கப்படுகின்றனர். ஸ்ரேஸ்டா தேர்வு பற்றி மாநில மொழியில் விழிப்புணர்வும், விளம்பரமும் செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஒன்றிய மற்றும் மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு கர்நாடகாவிற்கு ரூ.1448 கோடி ஒதுக்கிய ரயில்வே துறை தமிழகத்திற்கு ரூ.301 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. ஆனால் தேர்தலுக்கு முன் இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகாவிற்கு ரூ.2286 கோடி அறிவித்துவிட்டு இப்போது ரூ.1448 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தெற்கு இரயில்வேக்கு ரூ.971 கோடி அறிவித்து ரூ.301 கோடி மட்டுமே தந்துள்ளதாக மதுரை எம்பி வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் – செங்கோட்டை இடையே இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில் குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: தாம்பரம் – செங்கோட்டை அதிவேக விரைவு ரயில் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுக் காரணங்களால் இன்று இரவு 9 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை பரவையை சேர்ந்த சிறப்பு திறனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வீட்டில் சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த சமயநல்லூர் போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட வடுகபட்டியை சேர்ந்த கார்த்திக் கண்ணனை (33) நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.