Madurai

News July 29, 2024

மதுரையில் நிர்வாக தீர்ப்பாயம் – உத்தரவு

image

ஒன்றிய நிர்வாகத் தீர்ப்பாய கிளையை மதுரையில் அமைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை ஆணை பிறப்பித்துள்ளது. ஒன்றிய நிர்வாகத் தீர்ப்பாய கிளை மதுரையில் அமைந்தால் தென் மாவட்ட அதிகாரிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு குறித்து ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

News July 29, 2024

கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணமில்லை

image

கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண வசூல் முறை குறித்து இன்று (ஜூலை 29) ஆட்சியர் சங்கீதா, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சுங்கச்சாவடி போராட்ட குழு, சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், உள்ளூர் முகவரி உள்ள மக்களுக்கு கட்டண விலக்கு தொடரும் என்றும், திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளர்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.

News July 29, 2024

மதுரை: கடன்தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

image

மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த பாண்டிய ராஜன்-கார்த்திகா தம்பதிக்கு 3,5 வயதில் மகள்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் பாண்டிய ராஜன் தன் குடும்பத்தோடு அரளி விதையைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையிலிருந்த குடும்பத்தினரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.கடன் தொல்லையால் தற்கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 29, 2024

அமைச்சர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை

image

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து நாளை திருமங்கலம் உள்ளிட்ட 10 ஊர் மக்கள் முழு கடையடைப்பு போராட்டம் மற்றும் சுங்கச்சாவடியை முற்றுகையிட உள்ளனர். இந்நிலையில் இன்று வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.  

News July 29, 2024

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1ல் போராட்டம்

image

மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நேற்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்திய மக்களுக்கு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மத்திய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து இடது சாரிக்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும்” என்று தெரிவித்தார்.

News July 29, 2024

போக்சோ வழக்கில் போலி சாமியார் கைது

image

திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மனோஜ்குமாரை(63), அப்பகுதி மக்கள் சாமியார் என அழைத்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்நிலையில் இவர், 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த. சிறுமி அளித்த தகவலின் பேரில், பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி சாமியார் மனோஜ்குமாரை நேற்று கைது செய்தனர்.

News July 28, 2024

2026 தேர்தலை கருத்தில் கொண்டு.. ஜி.கே.வாசன் விளக்கம்

image

மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள விடுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 28) தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். கூட்டத்தில் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

News July 28, 2024

திமுக சார்பில் தென்னிந்திய கபடி போட்டி

image

மதுரை மாவட்டம் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மதுரை மாநகர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டி இன்று (ஜூலை 28) நடைபெற்றது. இதில், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

News July 28, 2024

மதுரை பாஜக மாவட்ட தலைவர்கள் மீது சரமாரி புகார்

image

மதுரை மாவட்ட பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசலை விசாரிப்பதற்காக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் நேற்று மதுரை மாவட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மாநகர் மாவட்டத் தலைவர் மகா சசீந்திரன் மீது 20 பேரும், கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் மீது 60 பேரும், மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் மீது 50 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

News July 28, 2024

மதுரைக்கு நாளை வருகை தரும் தமிழக ஆளுநர்

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (ஜூலை 29) மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தர இருக்கிறார். நான்கு வழிச்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்த பின்பு மாலையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராஜர் கலை கல்லூரியில் நடக்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறார். ஆளுநர் வருகையை முன்னிட்டு மதுரையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!