India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி இவர் பள்ளி ஒன்றில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை சிறுமி தனியாகச் சென்ற போது வந்த வாலிபர் ஒருவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியதாக கூறப்படுகிறது. சிறுமி தரப்பு புகாரில் மகளிர் போலீசார் சொக்கலிங்கபுரம் செல்வம் 30 என்பவரை தேடி வருகின்றனர்.
மதுரை – போடி வழித்தடத்தில் நாளை (ஆக.22) மதியம் தண்டவாள உறுதி தன்மை கண்டறியும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த சோதனை ஓட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு 3 மணிக்கு போடியை சென்றடையும். மறுமார்க்கத்தில் போடியில் 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5மணிக்கு மதுரை வந்தடையும். எனவே பொதுமக்கள் இந்த நேரங்களில் ரயில்வே தண்டவாளங்களை கவனமாக கடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3.00 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள தகுதியுடையோர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 30 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
2009 இல் தொடங்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான முதல் ஆப் ‘Grinder Gay App’ ஆகும். தற்போது இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான மொபைல் பயன்பாடாக மாறியுள்ளது. இந்தியாவில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் Grinder Gay App-ஐ தடை செய்ய, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (20.8) உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் ரூ.1 கோடியே 50 லட்சம் வரி வசூல் நிதியிழப்பு குறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 வருவாய் உதவியாளர்கள், மாநகராட்சி அலுவலர் சங்க பிரதிநிதிகள் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் பேச்சுவார்த்தை முடிவில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு விசாரிக்க மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆவணி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகன் தெய்வானை தங்க ரதத்தில் புறப்பாடகி வீதியுலா நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த முருகன் தெய்வானையை பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தலித் விடுதலை இயக்கம் சார்பில் இன்று மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். அதில் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோருக்கு கடந்த பிப்.1 வரை மதுரை மாவட்டத்தில் 42 வழக்குகளில் 49 பேருக்கு ரூ.13 ஆயிரத்து 200 வழங்கப்பட்டது. இத்தொகை கடந்த பிப்.21 க்கு பின்பு ரூ.7500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த 6 மாதங்களாக பலருக்கும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தி வைத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், விடுதிகளை மூட முயற்சிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தி ஆக. 24 அன்று செக்கானூரணியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய வருவாய் மாவட்டங்களின் அ.தி.மு.க. சார்பில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் இன்று(ஆக.20) நீதிபதி வழக்கு விசாரணையின் போது, ஆதரவற்ற, பாதிக்கப்பட்ட பெண் குழந்தை, மாணவிகள் பயன்பெறும் வகையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை பிரிவில் தமிழ்நாடு அரசு உணவு, உடை, சீருடை, கல்வி என அனைத்தும் வழங்குகிறது. இந்த திட்டம் மிகவும் பாராட்டத்தக்க திட்டம் என்று தமிழக அரசை பாராட்டினார்.
மதுரை நத்தம் மேம்பாலத்தில் மொத்தம் 268 பிரம்மாண்ட தூண்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு தூணையும் வரிசைப்படுத்தி சாலையில் செல்லக்கூடிய வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியக்கூடிய வகையில் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் செல்லும் சாலையின் இரு புறமும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு சாலைகள் பிரிவதால் இதில் குறிப்பிடப்பட்ட எண்கள் மூலம் எளிதில் அடையாளம் கண்டு செல்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.