Madurai

News August 1, 2024

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு

image

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோவிலில் இன்று(ஆக., 1) முதல் 5 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் மலை ஏறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள், தீப்பற்றக்கூடிய பொருட்கள், ஆயுதங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும்(01-08-24) அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 1, 2024

மதுரையில் மேலும் ஒரு கடத்தல் சம்பவம்

image

மதுரையை சேர்ந்த பிரவீன் என்பவரது போனை பறித்த மணிமாறன் என்ற நபர், பிரவீன் தன் காதலியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து பிரவீன் தன் காதலி, அவரது உறவினரான சிறுவனுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது சிறுவனை கடத்தியதாக கூறப்படுகிறது. சிறுவனை மீட்ட போலீசார் மணிமாறன், அவரது தாய் கவிதா உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.

News August 1, 2024

மாணவர் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

image

மதுரையில் கடந்த 11 ஆம் தேதி ரூ.2 கோடி பணம் கேட்டு பள்ளி மாணவர், ஆட்டோ ஓட்டுநருடன் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் காவலர் செந்தில்குமார், அப்துல் காதர், வீரமணி, காளிராஜ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். சூர்யா என்ற பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஐகோட் மகாராஜவை நேற்று தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

News August 1, 2024

13 நாளில் 9 ரயில் விபத்து: MP வெங்கடேசன் சாடல்

image

மக்களவையில் நேற்று(ஜூலை 31) நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மதுரை MP சு.வெங்கடேசன், “ஒரு காலத்தில் இரயில்வேக்கு என்று தனிபட்ஜெட் இருந்தது. நாடாளுமன்றத்தில் அதனைப்பற்றிய விவாதம் நடக்கும். ஆனால் ரயில்வே பட்ஜட்டையே ஒழித்துக்கட்டிய பெருமை பாஜகவையே சாரும். இதனால்தான் 13 நாளில் 9 ரயில் விபத்துகள் நடந்துள்ளது” என மத்திய அரசை சாடினார்.

News July 31, 2024

20 ஆண்டுகளில் 5,557 லஞ்ச வழக்குகள் பதிவு

image

தமிழகத்தில் 2004 ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 5,557 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில், 3,035 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1,059 வழக்குகள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும், 574 வழக்குகளில் தீர்ப்பாய ஒழுங்கு நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

குண்டர் சட்ட அறிவுரை கழகம் அமைக்க உத்தரவு

image

மதுரையில் குண்டர் சட்ட அறிவுரை கழகத்தை 2 மாதங்களில் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்ட அறிவுரை கழகத்தை 2 மாதங்களில் அமைக்க தவறினால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. பொதுநல வழக்கு ஒன்றில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

News July 31, 2024

புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் பதவியேற்பு

image

மதுரை ரயில்வே கோட்டத்தின் புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக எல்.என்.ராவ் இன்று (ஜூலை 31) பதவி ஏற்றார். முன்னதாக கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக இருந்த சி. செல்வம் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எல்.என்.ராவ் புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக பொறுப்பேற்றுள்ளார். இவர் முன்பாக மேற்கு ரயில்வே இந்தூர் கட்டுமானப் பிரிவில் துணை முதன்மை பொறியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

News July 31, 2024

ஆன்லைனில் கடன் பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

image

திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் பெற்று, அதனை முழுமையாக செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு, ராகுல் என்ற பெயரில் கடனை உடனே திருப்பி செலுத்தாவிட்டால், உங்கள் படத்தை ஆபாசமாக சித்தரித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் முகநூல் நண்பர்களுக்கும் அனுப்பப்படும் என மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News July 31, 2024

கலைஞர் நூலகம் – முதல்வர் நெகிழ்ச்சி

image

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த நூலகத்துக்கு 10 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். இது குறித்து தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இத்தனை குறுகிய காலத்திற்குள் 10 லட்சம் வருகையாளர்களைக் கடந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

News July 31, 2024

சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடுக – சீமான்

image

நாம் தமிழர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!