India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2019 இல் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை சிபிசிஐடி போலீசாருக்கு இன்று ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், நீட் முறைகேடு என்பது சமுதாயத்தை பாதிக்கக்கூடியது. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் குறித்து எம்.பி சச்சிதானந்தம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய மத்திய அமைச்சர் சுகாதார துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிக்கு ரூ.157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணி அக்டோபர் 2026 ஆம் ஆண்டு நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.
மதுரை சிப்காட் நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை மேலுாரில் அரசு நிலத்தில் 278 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்பட உள்ளது. இதற்கான சாலைவசதி, கழிவுநீர், மின்சார வசதி, குடிநீர் வசதி, டிரக் செல்லும் வசதி குறித்து பொறியாளர்கள் அளவெடுத்துள்ளனர். 2 வாரங்களுக்குள் விரிவான திட்ட அறிக்கைக்கான (டி.பி.ஆர்.) டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இளம்பெண்களாகிய உங்களுக்கோ, அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்களுக்கோ ஏதாவது பாலியல் ரீதியிலான சம்பவங்கள் நடக்கும்போது உடனடியாக போலீசாருக்கோ அல்லது நம்பிக்கையானவர்களிடமோ தைரியமாக தெரிவிக்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிபதி அனுராதா அறிவுறுத்தியுள்ளார். மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் இதன்மூலம் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும் என தெரிவித்தார்.
மதுரையில் எய்ம்ஸ் அமைவதன் தாமதம் குறித்து அமைச்சர் ஜே.பி. நட்டா விளக்கமளித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் அமைப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தை ஒப்புக்கொள்வதாக தெரிவித்ததுடன் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் கூறினார். மேலும், தொழில்நுட்ப காரணங்களாலேயே பணிகள் தாமதாவதாகவும் தெரிவித்தார்.
ராம்நாடு வளநாடு கிராமத்தை சேர்ந்தவர் மிக்கேல்(72). இவர் நேற்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பரமக்குடி செல்லும் பஸ்ஸில் அமர்ந்திருந்தபோது, அருகே இருந்த நபர் பேச்சு கொடுத்து பின்னர் ‘டீ’ வாங்கி அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் மிக்கேல் மயங்கிய நிலையில், அவர் அணிந்திருந்த மோதிரம்(1 பவுன்), கைக்கடிகாரத்தை பறித்து சென்றுள்ளார். அந்நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாநகரின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் ‘மாமதுரை விழா’ வரும் 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். மக்களும், மாணவர்களும் பங்கேற்கும் விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், சுற்றுலாவை மேம்படுத்த பட்டம் விடும் திருவிழா, அடுக்குமாடி பேருந்துப் பயணம், பாரம்பரிய நடைபயணம், சைக்கிளிங் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறன..
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தமிழ் மாதங்கள் அனைத்திலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் சித்திரைத் திருவிழா, வைகாசித் திருவிழா, ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழாவைப் போல் ஆடி மாதத்தில் நடைபெறும் முளைக்கொட்டுத் திருவிழா பிரசித்திப் பெற்ற திருவிழாவாக உள்ளது. அதன்படி இந்த ஆண்டு முளைக்கொட்டுத் திருவிழா ஆகஸ்ட் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை வண்டியூர் கண்மாய்க்கரையிலுள்ள சுந்தரம் பூங்காவில் உணவு அரங்குகளுக்கான கட்டுமான பணிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. பூங்காவில் உணவு அரங்குகளை பயன்படுத்துவோர் உணவு, பிளாஸ்டிக் கழிவுகளை விட்டுச்செல்லும் நிலையால் கண்மாய் மாசுபடும் என்பதால் உணவு அரங்குகளுக்கான கட்டுமானப் பணிக்கு தடை விதிக்க கோரிய மனு மீதான விசாரணையில் கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
கடந்த 1996 ஆம் ஆண்டு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதில் ஆயுள் தண்டனை பெற்ற சேகரை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை திரும்பபெற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.