Madurai

News August 6, 2024

அமெரிக்க பெல்லோஷிப்-க்கு தேர்வான மதுரை ஐஏஎஸ் அதிகாரி

image

மதுரை மாவட்டம் திருவாதவூரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜமாணிக்கம் தற்போது கேரள மாநில தேவசம் போர்டு வருவாய் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு அமெரிக்காவின் கார்னெல் பல்கலையில் ஹூபர்ட் எச்.ஹம்ப்ரீ பெல்லோஷிப் படிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு ஒருவருக்கே இந்தப் பல்கலையில் பெல்லோஷிப் படிப்புக்கு அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 5, 2024

“இபிஎஸ் தும்மினாலும் பதவி விலகச் சொன்னவர் ஸ்டாலின்”

image

எதிர்க்கட்சியாக இருக்கும் போது இபிஎஸ் தும்மினாலும் கூட பதவி விலக வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது கள்ளச்சாராய மரணம், கொலை, கொள்ளை சம்பவம், போதை பொருள் நடமாட்டத்திற்கு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளச்சராயத்திற்கு எதிராக இந்த அரசு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

News August 5, 2024

மதுரை மாவட்ட மக்களுக்கு ஜில் நியூஸ்

image

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு இன்று (ஆக.05) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 10 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2024

மதிமுக நிர்வாகிகள் பலி – துரை வைகோ ஆறுதல்

image

மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த மதிமுக தொண்டரணி அமைப்பாளர் பச்சமுத்து, நிர்வாகி அமல்ராஜ், புலிசேகர் ஆகியோர் நேற்று சென்னையில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் பங்கேற்று விட்டு இன்று (ஆக.05) காரில் மதுரை திரும்பிய நிலையில் மேலூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

News August 5, 2024

திமுக தொண்டர்களுக்கு அமைச்சர் அழைப்பு

image

முன்னாள் முதல்வர் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி வாடிப்பட்டியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அமைதி பேரணி நடைபெற உள்ளது. பேரணி முடிவில் பேருந்து நிலையத்தின் முன்பாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது. திமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் மூர்த்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

அதிகாரிகள் இடமாற்றத்தால் எந்த மாற்றமும் வராது – உதயகுமார்

image

46 நாட்களில் 41 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. எதிர்கட்சியாக இருக்கும் போது இபிஎஸ் தும்மினாலும் பதவி விலக வேண்டும் என ஸ்டாலின் கூறினார். கள்ளச்சாராய மரணம், தொடர் கொலை, கொள்ளைச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா ? என ஆர்.பி. உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

News August 5, 2024

ஆடி முளைகொட்டு திருவிழா தொடக்கம்

image

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பிரசித்தி பெற்ற ஆடி முளைகொட்டு உற்சவம் இன்று காலை கன்னியா லக்கனத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மேளதாளத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடி முளைகொட்டு உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

News August 5, 2024

மதுரை விபத்தில் ஆறாத துயரில் தவிக்கிறேன் – துரை வைகோ

image

மதுரை மாநகர் மாவட்டக் கழக தொண்டர் அணி நிர்வாகிகளான பச்சைமுத்து, அமிர்தராஜ், புலி சேகர் ஆகிய மூவரும் இன்று அதிகாலை மேலூர் அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தனர். இந்த மூன்று தம்பிகளும் என் குடும்பத்தில் ஒருவராகவே பழகியவர்கள்.இந்த விபத்து ஏற்பட்டிருப்பது மனதிற்கு கூடுதல் வலியை தருகிறது. உயிருக்கு உயிரான தம்பிகளை இழந்து ஆறாத துயரில் தவிக்கிறேன் என துரை வைகோ தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

விபத்தில் மதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் பலி

image

மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் ம.தி.மு.க தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து, அமல்ராஜ், புலிசேகர் ஆகியோர் உயிரிழந்தனர்.சென்னையில் இருந்து கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு இன்று அதிகாலை மதுரை வந்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

News August 5, 2024

மதுரையில் நாளை மின்சாரம் நிறுத்தம்

image

மதுரையில் உள்ள புதூர், ஆனையூர், எல்லீஸ் நகர் துணைமின் நிலையங்களில் நாளை(ஆக.6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதூர் துணைமின் நிலையம், ஆனையூர் துணைமின் நிலையம், எல்லீஸ் நகர் துணைமின் நிலையங்களுக்குட்டபட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!