Madurai

News August 10, 2024

மதுரையில் 6 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய நபர்!

image

மதுரை எழுமலை பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் நேற்று(ஆக.,9) ரோந்து சென்றனர். அப்போது மீனாட்சிபுரம் விலக்கில் பைக்கில் நின்றிருந்த பெரியகட்டளையை சேர்ந்த கணேசன்(45) என்பவரை சோதனை செய்ததில், அவரது பைக்கில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவையும், பைக்கையும் பறிமுதல் செய்தனர். காவல்துறை எவ்வளவு கிடுக்குப்பிடி போட்டும் எங்கிருந்து வருகிறது கஞ்சா?

News August 10, 2024

வைகை ஆற்றை போற்றிய மாணவிகள்

image

மதுரையின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் ‘மாமதுரை’ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 2 ஆவது நாளான நேற்று(ஆக.,9) மாலை, மதுரை வைகை ஆற்றை போற்றும் விதமாக பள்ளி கல்லூரி மாணவிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அணிவகுத்து நின்று வைகையை வணங்கினர். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர். நம்ம வைகையை பற்றி உங்கள் கருத்து?

News August 9, 2024

காமராஜர் பல்கலைக்கழகத்தில் மீண்டும் நிதி நெருக்கடி

image

மதுரை காமராஜர் பல்கலைகத்தில் 140 நிரந்தர பேராசிரியர்கள் உட்பட 1100 பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 கோடி வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் கடந்த சில மாதங்களாக நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த நிலையில் மீண்டும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஜூலை மாத சம்பளம் தற்போது வரை வழங்காததால் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News August 9, 2024

கார் ரேஸ் நடத்த மிரட்டி பணம் வசூல் – ஆர்பி உதயகுமார்

image

சென்னையில் கார் ரேஸ் நடத்த தொழில் நிறுவனங்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் புகார் குறித்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் தருவாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வில் பேசிய அவர், நிதி வழங்கவில்லை என்றால் சிக்கல் ஏற்படும் என தொழில் முனைவோர் குழம்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

News August 9, 2024

தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 9,779 மாணவர்கள் பயன்

image

மதுரையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தை இன்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். தமிழ்வழியில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 9,779 மாணவர்கள் பயன்பெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

News August 9, 2024

நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் – அமைச்சர் பெருமிதம்

image

மதுரைக்கல்லூரியில் நடைபெற்ற “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் பேசுகையில், சராசரி சுமார் 25% இருக்கும் நிலையில் தமிழ்நாடு 50% பக்கத்தில் இருக்கிறது. நாட்டிலேயே முதலிடத்தில் நாம் இருக்கிறோம்” என பெருமிதத்துடன் கூறினார்.

News August 9, 2024

மதுரைக்கு புது காவல் அதிகாரிகள் நியமனம்

image

மதுரைக்கு புதிய காவல் உயர் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு இன்று(ஆக.,9) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராக இனிகோ திவ்யன், மதுரை நகர் தலைமையிடத்து காவல் துணை ஆணையராக ராஜேஸ்வரி, பயங்கரவாத எதிர்ப்புப் படை காவல் கண்காணிப்பாளராக ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News August 9, 2024

“கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம்”

image

கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை உத்தபுரத்தில் ஜாதி பிரச்னையால் மூடி வைத்துள்ள கோயிலை திறந்து வழிபாடு நடத்த உத்தரவிடக்கோரி பாண்டி என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில், கோயிலை காலவரையின்றி மூடி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இவற்றை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கக்கூடாது எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

News August 9, 2024

2 வயது குழந்தை உட்பட 2 பேர் பலி

image

திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி பாலம் அருகே இன்று(ஆக.,9) காலை அரசுப் பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் சென்ற திருப்பத்தூரை சேர்ந்த 2 வயது குழந்தை சிவானிக்கா, சௌவுந்தர்ராஜ்(40) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த மேலும் 5 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News August 9, 2024

MADURAI: ரூ.3 லட்சம் நிதி பெற விண்ணப்பிக்கலாம்

image

மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் & சீர் மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுவதாக ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!