India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வ வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மதுரையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் குடை கோவிலுக்குள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்படுவதாகவும், குடையை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம்ம மதுரையில கோபுரம் சினிமாஸ், குரு தியேட்டர், வெற்றி சினிமாஸ்(வில்லாபுரம், மாட்டுத்தாவணி), ஷா தியேட்டர், ஐநாக்ஸ், தங்க ரிகள், அம்பிகா சினிமாஸ்-ல ஞாயிற்றுக்கிழமையான இன்னைக்கு(ஆக.,11) நீங்க என்ன படம் பாக்க போறீங்க. இது இல்லாம கோயில், ECO பார்க், நாயக்கர் மஹால், தெப்பக்குளம் போறீங்களா. இந்த சூப்பரான விடுமுறைய நீங்கள எப்படி கடக்க போறீங்கன்னு comment-ல சொல்லுங்க.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளான இன்று காலை தங்க சப்பரத்தில் அன்னை மீனாட்சி சேர நாட்டு மகாராணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சித்திரை வீதியில் உலா வந்த மீனாட்சியம்மளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உதயநிதிக்கு துணை முதலமைச்சராக சுபமுகூர்த்தம் குறித்து விட்டதாக தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். உதயநிதி துணை முதலமைச்சராக ஆகிய பின் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடாது, கள்ளச்சாராய ஆறு தான் ஓடும் என கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மதுரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், திமுக ஆட்சி சாதிக்கவில்லை என்றும் சறுக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அதன்படி நாளை(ஆக.11), நாளை மறுநாள்(ஆக.12) மதுரை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்.
தர்மபுரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வி என்ற பெண் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவரது செயற்கை காலை அகற்ற சொல்லி போலீசார் கட்டாயப்படுத்தியதாகவும்,சக்கர நாற்காலியில் செல்ல ரூ.500 கேட்டதாகவும் கூறி அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரத்தில் எஸ்.எஸ். ஐ சந்தானபாண்டியன் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுகலை பாடப் பிரிவுகளுக்கான (எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்.) மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆக.13, மாணவிகள் சேர்ப்பு ஆக.14, பொது கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆக.19, 20 இல் நடைபெற உள்ளது. மேலும் ஆக. 21ம் மாணவிகள் சேர்க்கையும் நடைபெற உள்ளது.
மேலூர் அருகே கல்லம்பட்டி முன்னமலை சுவாமி, ஆயி கருப்பன் சுவாமி கோயிலின் ஆடி மாத திருவிழா கடந்த 15 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பெண் பக்தர்கள் மண்பானையில் தீர்த்தத்தை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து பொங்கல் வைத்து, 400 நாட்டு கோழிகள் சமைத்து நேற்று விருந்து பரிமாறப்பட்டது. இன்று இதேபோல் 55 ஆடுகளை பலியிட்டு சமைத்து சாமிக்கு படையல் செய்து பொது கறி விருந்து நடைபெற்றது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள்(ஆக.,12) 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திலும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாளய அமாவாசையை ஒட்டி, மதுரையில் இருந்து காசி, கயாவுக்கு சிறப்பு யாத்திரை ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்பட உள்ளது. மதுரையில் செப்டம்பர் 30 ஆம் தேதி புறப்படும் யாத்திரை சிறப்பு ரயிலில் 10 நாள் சுற்றுலா செல்ல தகவல் பெற 73058 58585 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE IT.
Sorry, no posts matched your criteria.