Madurai

News September 1, 2024

சுங்கச்சாவடி கட்டணம் உயரவில்லை

image

தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு சுங்கச்சாவடிகளில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது. சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் சாலை மேம்பாடு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால் தற்போது நடைமுறையில் உள்ள கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

News September 1, 2024

ரூ.2  கூடுதலாக வசூலித்ததால் ரூ.25,000 இழப்பீடு

image

மதுரை-காரியாபட்டி வழித்தட தனியார் பேருந்தில் காரியாபட்டியை சேர்ந்த வழக்கறிஞர் மரகதவள்ளியிடம் ரூ.28 கட்டணத்திற்கு பதில் ரூ.30 வசூலிக்கபட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.2 மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.15,000, வழக்கு செலவாக ரூ.10,000 என மொத்தம் ரூ.25002 வழங்க தனியார் பேருந்து நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News September 1, 2024

மதுரையில் டோல்கேட் கட்டணம் உயர்வு

image

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது. சுங்கக்கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

News September 1, 2024

மதுரையில் வெள்ளி விழா காணும் சிறுவர் பூங்கா

image

மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ராஜாஜி பூங்கா நகரின் முக்கிய பொழுதுப்போக்கு இடங்களில் ஒன்றாக உள்ளது. வெள்ளி விழா காணும் இந்த பூங்கா தற்போது காலத்திற்கு தகுந்தார்போல் நவீனப்படுத்தப்படாமல் 2கே கிட்ஸ் குழந்தைகளை, இந்த பூங்கா எந்த வகையிலும் ஈர்க்கவில்லை. எனவே இந்த பூங்காவை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

News August 31, 2024

விளையாட்டு பயிற்சிக்கு கூடுதல் கட்டணம் வசூல்?

image

மதுரை ரேஸ்கோர்ஸ் மாவட்ட விளையாட்டு அரங்கில் குறிப்பிட்ட சில பயிற்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான சரியான கட்டணத்தை www.sdat.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் ஆன்லைன் மூலம் செலுத்தினால் போதும் எனவும், கூடுதல் கட்டணம் வசூலித்தால் தன்னிடம் நேரடியாக புகார் அளிக்க மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

மதுரையில் விரைவில் ஏர் பலூன் சவாரி

image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் மாவட்டத்தின் சுற்றுலா வருவாயை அதிகரிக்க சாகச சுற்றுலாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே இளம் தலைமுறையினரை கவரும் விதமாக மலையேற்றம், காத்தாடி விழா, ஏர் பலூன், ஜிப்லைன், சைக்ளிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன. மேலும், தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

News August 31, 2024

ராஜாஜி மருத்துவமனைக்கு புதிய முதல்வர்

image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக செல்வராணி (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக முதல்வர் ரத்தினவேல் கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து பொறுப்பு முதல்வராக தர்மராஜ் நியமிக்கப்பட்டார். பொறுப்பு முதல்வராக பணியில் இருந்த தர்மராஜ் இன்றுடன் பணி ஓய்வு பெற்றதையடுத்து இன்று முதல் புதிய முதல்வராக (பொறுப்பு) டாக்டர். செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

News August 31, 2024

மதுரையில் புத்தக கண்காட்சி செப்டம்பர் 6-ல் துவக்கம்

image

மதுரை மாவட்டத்தில் புத்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வரும் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக கலெக்டர் சங்கீதா நேற்று செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளார். காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும், புத்தக கண்காட்சிகள் நாள்தோறும் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள், சிந்தனை பேச்சுக்கள் இடம் பெற உள்ளன.

News August 31, 2024

சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தல்

image

சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த பல ஆண்டுகளாக முடிக்கிடக்கிறது. இந்நிலையில் மீண்டும் ஆலையை திறக்க தமிழக அரசை வலியுறுத்த கோரி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவன ஈர்ப்பு கடிதத்தை சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாரிடம் இன்று கோரிக்கை மனுவாக அளித்தனர்.

News August 31, 2024

மதுரையில் மரக்கன்று நட்டால் ரூ.1லட்சம்

image

மதுரை திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பவுண்டேஷன், இளம் மக்கள் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை வகித்தார். 450 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. மதுரையை பசுமையாக்கும் முயற்சியாக அதிக மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் மாணவருக்கு ரூ 1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பார்வை பவுண்டேஷன் நிறுவனர் சோழன் குபேந்திரன் தெரிவித்தார்.

error: Content is protected !!