Madurai

News May 7, 2025

பள்ளி குழந்தை பலியான விவகாரம் – இருவர் சிறையில் அடைப்பு

image

மதுரை சிறுமி உயிரிழந்த வழக்கில் 8க்கும் மேற்பட்டோரிடம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அலட்சியமாக செயல்பட்டதாக பள்ளி தாளாளர் திவ்யா ராஜேஷ் மற்றும் உதவியாளர் வைரமணி ஆகிய இருவர் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறைச் சாலையில் இருவரையும் அடைத்தனர்.

News May 7, 2025

மதுரை சிறுமி உயிரிழப்பு – பள்ளியின் உரிமம் ரத்து

image

மதுரையில் உள்ள ஸ்ரீ மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து நேற்று (ஏப்.29) 4 வயது குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து பள்ளியின் உரிமையாளர் திவ்யா, அவரது உதவியாளர் வைரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், பள்ளியின் உரிமத்தை மாவட்ட கல்வி அதிகாரி ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News April 30, 2025

திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

அவ­னி­யா­பு­ரம் அயன்பாப்­பா­குடியை சேர்ந்­தவர் அழ­கர் மகன் முனி­ய­சாமி(35). திரு­மணம் ஆகாத இவருக்கு குடிப்­ப­ழக்­கம் இருந்­தது. திருமணம் ஆகாததை நினைத்து அடிக்­கடி புலம்­பி கொண்­டி­ருந்­துள்­ளார். இதனால் 2 முறை தற்­கொலைக்கு முயன்று காப்­பாற்­றி­ உள்­ள­னர். இந்நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள மாட்­டு கொட்­ட­கை­யில், மாடு கட்டும் கயிற்­றால் தூக்குபோட்டு நேற்று தற்­கொலை செய்து கொண்­டார்.

News April 29, 2025

மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.

News April 29, 2025

மதுரை பெண்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

மதுரை மக்களே அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
▶️திருமங்கலம் -04549-280361
▶️தி.குன்றம்-04182-220620
▶️உசிலம்பட்டி -04552-253510
▶️ மேலூர் -0452-2487725
▶️ சமயநல்லூர் -0452-24635360
▶️மதுரை நகர் -0452-2330031
▶️திலகர் திடல் -452-2533247
▶️தல்லாக்குளம்-0452 – 2538015
இந்த எண்களை தெரிந்த அனைத்து பெண்களுக்கும் SHARE செய்து சேவ் பண்ண சொல்லுங்க.

News April 29, 2025

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஆணவக் கொலை அபாயம்

image

மதுரை ஹார்விபட்டி சிவசுப்ரமணியன் மனைவி முத்துஅருளி. பிறவியிலேயே இடுப்புக்குக் கீழ் கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளி. நேற்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் முத்து அருளி கூறியதாவது: கணவர் குடும்பத்தினரால் ஆணவக் கொலை ஆபத்து உள்ளது என முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தேன். இதுபற்றி திருநகர் போலீசார் முறையாக விசாரிக்காமல் விசாரணையை முடிக்கும் வகையில் கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்துகின்றனர் என்றார்.

News April 28, 2025

மதுரை மாநகரில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

மதுரை மாநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் நான்கு பேர் பணியிட மாற்றம். மதிச்சியம் காவல் ஆய்வாளர் வேதவல்லி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்,அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா, மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவு.

News April 28, 2025

மதுரை ரயில்வேயில் உடனடி வேலை

image

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 28, 2025

ஜல்லிக்கட்டு செல்ல மனைவி எதிர்ப்பு: வாலிபர் தற்கொலை

image

மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (26). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர், கோமதிபுரத்தை சேர்ந்த அட்சயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஹரிஹரன் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சென்று வந்தார். ஆனால், அவரது மனைவிக்கு இது பிடிக்கவில்லை. இதனால், கோபித்து கொண்டு அட்சயா, தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஹரிஹரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News April 28, 2025

இரவு நேர ரோந்து விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டம் புறநகர் பகுதிகளில் இரவு நேரம் வந்த பணிகளுக்கு தினமும் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் ஏதேனும் பிரச்சினைகள் மற்றும் புகார்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறியயுள்ளனர்.

error: Content is protected !!