India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை அண்ணாநகர் வீர வாஞ்சி தெரு அன்பு நகரைச் சேர்ந்த அழகு மனைவி மீனாம்பாள் (72). இவரது கணவர் அழகு இறந்து விட்ட நிலையில், உறவினரின் பராமரிப்பிலிருந்து வந்தார். இந்நிலையில், அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மனமுடைந்த மீனாம்பாள் வீட்டில் பிளேடு மூலம் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சிக்குட்பட்ட செக்கானூரணி கிராமத்தில் வாரச்சந்தை 2025-26-ம் ஆண்டிற்கான ஏலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் மூடி முத்திரையிடப்பட்ட விண்ணப்பங்களை 03.04.2025-ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணி வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரையை டி.கல்லுப்பட்டி அருகே கூவலப்புரம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பெண்கள் மாதவிலக்கு காலங்களில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் அவலம் இன்றளவும் தொடர்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு அறையில் பெண்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். பெண்கள் பல்வேறு தடைகளை தாண்டி தடம் பதிக்கும் நவீன உலகில் தொடரும் இந்த நடைமுறை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
திருமங்கலத்தில் நடந்து சென்ற சிறுவனை நாய் ஒன்று கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் மட்டும் கடந்த 3 மாதத்தில் 100க்கு மேற்பட்டோர் நாய்க்கடிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,”தமிழ்நாடு அரசின் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் ரம்ஜானை முன்னிட்டு 31.03.2025 வரை பொதுமக்கள் வாங்கும் புத்தாடைகளுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படும். 3 ஆடைகளுக்கு மேல் வாங்குவோருக்கு 33% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.2 நாட்கள் மட்டுமே உள்ளதால் வாய்ப்பை தவறவிடாதீர்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி பொன்வண்ணன் தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த போது போலீசாரால் இன்று துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. கிராமசபைக் கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தவறாமல் கலந்து கொண்டு விவாதிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் அறிவால் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் சமயநல்லூரைச் சேர்ந்த சூர்யா 23, கண்ணன் 23 என்பதும் ஜாமினில் வெளிவந்த சரண் என்பவரை கொலை செய்ய ஆயுதங்களுடன் வந்தது தெரயவந்தது.
மதுரை கீரைத்துரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி 5 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் பிரபல ரவுடி சபா ரத்தினம் மற்றும் நாக முருகன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (மார்ச்.28) அவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அதில், பிரபல ரவுடி சபா ரத்தினத்திற்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிழுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் தந்தை இறப்புக்கு முதல்வர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் தந்தையாரான இரா.சுப்புராம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் சு.வெங்கடேசன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.