India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட த.மா.கா சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று(ஆக.,12) நடைபெற்றது. இதில், திருமங்கலம் & திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் துரைப்பாண்டி அறிவித்துள்ளார். இதனால் அக்கட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
மதுரையில் ஆவின் மூலம் நுகர்வோருக்கு வழங்கிய பால் பாக்கெட்டுகள் சுமார் 6 ஆயிரம் லிட்டருக்கு மேல் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று(ஆக.,12) பால் முகவர்கள் ஆவினில் வந்து பால் பாக்கெட்டுகளை மாற்றிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த ஆவின் நிர்வாகம், இனிமேல் இதுபோன்று நடைபெறாது எனவும் உறுதியளித்துள்ளதாக தகவல்.
மதுரை மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று(ஆக.,15) 450 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர், செயலர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி,2024-25ஆம் ஆண்டின் வளர்ச்சி பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மாநகரில் கடந்த ஓராண்டில் போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபட்ட 4 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.மேலும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்தி விற்பனை செய்ததற்காக 720 வழக்குகளில் 764 குற்றவாளிகளை கைது செய்து 1953கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஆக.,13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்திலும் இன்று கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை எடுத்துச் செல்லவும். தெரிஞ்சங்களுக்கு SHARE பண்ணுங்க!
மதுரை மாவட்டத்தில் வரும் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) 450 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர், செயலர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி,2024-25ஆம் ஆண்டின் வளர்ச்சி பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வரும் 18ஆம் தேதி சிறுவர் சிறுமியருக்கான இலவச மேற்கத்திய நடன பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக கலைஞர் நூற்றாண்டு நூலக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் http://tinyurl.com/kclkids என்ற இணைய பக்கத்தில் முன்பதிவு செய்துகொண்டு நடன பயிற்சியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் 2024ஆம் ஆண்டு திருப்பவித்திர உற்சவம் வரும் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. 15ஆம் தேதி காலை 9 மணி அளவில் 108 வெள்ளி கலசங்கள் வைத்து திருமஞ்சனம் நடைபெறும் என கள்ளழகர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றியதற்காக 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை இன்று (ஆக.12) வழங்கினார். இதில் மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார் ஆய்வாளர் அருணுக்கு முதல்வர் விருதினை வழங்கி கௌரவித்தார். சிறந்த பணிக்காக விருது பெற்ற ஆய்வாளருக்கு மதுரை மாவட்ட காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ் மதுரையில் நடைபெற்ற “ரகு தாத்தா” திரைப்பட பிரமோஷனல் நிகழ்ச்சிக்காக வருகை புரிந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து பொற்றாமரைக்குளம் முன்பாக நின்று அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டது தற்போது வைரலாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.