Madurai

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

News August 14, 2024

காவல்துறையின் கட்டுப்பாட்டில் மதுரை

image

சுதந்திர தினத்தையொட்டி மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக மதுரை விமான நிலையத்திலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மதுரை ரயில் நிலையம், பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News August 14, 2024

மதுரையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஆக.,14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.

News August 14, 2024

மதுரையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

மதுரை, கோ.புதூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை மறுநாள்(ஆக.,16) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பணியாளர்களைத் தோ்வு செய்யவுள்ளனா். 10 ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் இதில் பங்கேற்று பணி வாய்ப்புகளைப் பெறலாம் என துணை இயக்குநா் கா.சண்முகசுந்தா் தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

100 சுகாதார ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்

image

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் பணியாற்றிய சுகாதார ஆய்வாளர்களையும் பணியிடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தூய்மை பணியாளர்களிடம் போதிய ஒத்துழைப்பின்றி நடந்துகொள்வது, நீண்ட நாட்களாக ஒரே வார்டில் பணியாற்றியது போன்ற காரணங்களால் அனைத்து வார்டுகளிலும் உள்ள சுகாதார ஆய்வாளர்களை வெவ்வேறு வார்டுகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News August 13, 2024

மதுரையில் மதுக்கடைகள் மூடலா.?

image

தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் சுதந்திர தினம் அன்று மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டு வருகின்றனர். அந்தவகையில், மதுரை மாவட்டத்திலும் மதுக்கடைகள் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 13, 2024

மதுரை மாஜி அமைச்சர் மீது பரபரப்பு புகார்

image

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது விருதுநகர் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் பாஜகவினர் இன்று (ஆக.13) புகார் மனு அளித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியதாக செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

error: Content is protected !!