Madurai

News September 4, 2024

மருத்துவ கல்லூரியில் உடனே டீன் நியமிக்க உத்தரவு

image

மதுரை, திருச்சி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்டது என்றால் ஏன் கால தாமதம் செய்தீர்கள் . எனவே விரைந்து அந்த கல்லூரிகளுக்கான முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த நியமனம் சம்மந்தமான அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

News September 4, 2024

பேச்சுப்போட்டியில் பங்கேற்க அழைப்பு

image

மதுரையில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். வரும் 12 ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும்,  கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் மதுரை சங்கத் தமிழ் காட்சிக்கூட அரங்கில் நடைபெறுகிறது. முதல் பரிசு ரூ.5000, இரண்டாம்பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்பட உள்ளது.

News September 4, 2024

தரமற்ற உணவு விற்பனையா?உடனே இதை செய்யுங்க!

image

மதுரை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டத்தில் குளிர்பான தரமில்லாத உணவு மற்றும் குளிர்பானங்களை பயன்படுத்துவதை நுகர்வோர் தவிர்க்க வேண்டும். பேக்கிங் உணவுப்பொருள், குளிர்பானங்கள், ரோட்டு கடை, உணவகம், ஓட்டலில் சாப்பிடும் உணவின் தரம் மீது சந்தேகம் ஏற்பட்டால் உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். வாட்ஸ்ஆப்பில் (94440 42322) புகார் தெரிவிக்கலாம் என்றார்.

News September 4, 2024

திருநெல்வேலி – சென்னை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

image

மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை ஆகஸ்ட் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

News September 4, 2024

மதுரையில் 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

மதுரையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது மாநகர காவல்துறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட திருநகரை சேர்ந்த ஆதித்யன் (20), அஜய் (24), பாண்டித்துரை என்ற அய்யாவு (26) ஆகிய மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

News September 3, 2024

தனிநபர் நூலகங்களுக்கு பரிசு

image

மதுரை மாவட்டத்தில் வீடுகள் தோறும் நூலகம் என்ற தலைப்பில் தனி நபர் நூலகங்களில் சிறந்த நூலகத்தை தேர்ந்தெடுத்து அதற்கு ரொக்கப் பரிசு மற்றும் கேடயம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. செப்.10 ம் தேதிக்குள் தங்களது நூலக புகைப்படத்தை எடுத்து அருகில் உள்ள நூலகத்திலோ, மாவட்ட நூலக அலுவலரிடம் அளிக்கலாம். மேலும் dlomdu@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் என மாவட்ட நூலக அலுவலர் இன்று தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

அரசு பள்ளியில் பயின்று மருத்துவராகும் மாணவி

image

மதுரை மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று அரசு சார்பில் வழங்கப்பட்ட நீட் இலவச பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவி ரக்ஸனா நடந்து முடிந்த நீட் நுழைவு தேர்வில் 607 மதிப்பெண் பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீடு மூலம் மருத்துவராகும் வாய்ப்பை பெற்றுள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை துவங்க உள்ள அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

News September 3, 2024

நக்கீரர் அலங்கார வளைவை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

image

மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வளைவுகளை அகற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் அலங்கார வளைவை பொதுமக்களுக்கு சிரமமின்றி அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள நுழைவாயிலையும் அகற்றிட உத்தரவிட்டுள்ளது.

News September 3, 2024

வாடகை செலுத்தாத அறநிலைய துறை

image

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்து அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையர் அலுவலகம் ரூ.59 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளது என்பது ஆர்.டி.ஐ மூலம் வெளியாகியுள்ளது. மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான எல்லீஸ் நகரில் உள்ள கட்டிடத்தில் கடந்த 2017 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நிலையில் ரூ.59 லட்சத்து 65 ஆயிரம் வாடகை பாக்கி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

News September 3, 2024

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

image

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் விருதுநகரைச் சேர்ந்த ஆதி ஸ்ரீவிவேகா கடந்த செமஸ்டரில் தோல்வியடைந்த பிசியாலஜி பாடத்தை மீண்டும் எழுதிய நிலையில், அதிலும் தோல்வி அடைந்ததால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் மற்றும் மருத்துவர் கல்லூரி நிர்வாகம் தரப்பில் விசாரணை.

error: Content is protected !!