India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு, விரிவான திட்ட அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ நிர்வாக குழு இத்திட்ட அறிக்கையில் சில மாறுதல்களை செய்ய திட்ட அறிக்கையை திரும்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மாறுதல் செய்து மீண்டும் மத்திய அரசு அனுமதி வழங்கிய பின்னர் மெட்ரோ குறித்து இறுதி முடிவு செய்யப்படும்.
கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை, விருதுநகரில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரி வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ் தாக்கல் செய்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள தவழும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குவதற்கான உடல் தகுதி சான்றிதழை சரிபார்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. முகாம் உரிய நேரத்தில் துவங்கப்படாமல் பல மணி நேரம் தாமதமாக துவங்கியதால் காலை 9 மணிக்கு வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் மாலை வரை பசியுடன் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.
தலித்களும் முதல்வராக முடியும். அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வரே வணங்கக்கூடிய சபாநாயகர் இடத்தில் தனபால் அவர்களை அமரவைத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. அதனால் யாரும் முதல்வராக முடியும். திராவிட கட்சி வழிவந்த அதிமுகவில் ஜெயலலிதா முதல்வராக வந்தார். அவரை யாரும் சாதி பார்த்து ஓட்டுபோடவில்லை. எம்.ஜி.ஆர்., அவர்களை யாரும் சாதி பார்த்து ஓட்டுபோடவில்லை என்றார். மதுரையில் இன்று பேட்டியளித்த அவர் இதை தெரிவித்தார்.
மதுரையைச் சேர்ந்த 7 பேர், குழந்தைகள் நல மருத்துவர் பிரியா பிஸ்வா குமாரை 4.5 கோடி ஏமாற்றிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி, “தென் மண்டல சைபர் க்ரைமில் பதிவான 25,775 வழக்குகளில், ஒரு வழக்கில் மட்டும் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது. தென் மாவட்ட சைபர் க்ரைமில், சென்னையில் இருப்பதுபோல உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லை” என்று கூறினார்.
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நாளை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான நேற்று(ஆக.,15) விதியை மீறி விடுமுறை அளிக்காத, மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 299 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மண்டல தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் – 131, சிவகங்கை – 39, ராமநாதபுரம் – 26 என மொத்தம் மதுரை மண்டலத்தில் 299 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கால தாமதமின்றி ரயில் இயக்குவதில், தேசிய அளவில் மதுரை ரயில்வே கோட்டம் முதலிடம் பெற்றுள்ளதாக கோட்ட மேலாளர் சரத் வஸ்தவா தெரிவித்துள்ளார். மதுரையில் 99% ரயில்கள் கால தாமதம் இல்லாமல் இயக்கப்பட்டுவதாக தெரிவித்த அவர், தேசிய அளவில் துல்லியமான நேரத்தில் ரயில்களை இயக்கியதில் மதுரை கோட்டம் முதன்மைப் பெற்றுள்ளது என்றுள்ளார். இதேபோல, சரக்கு ரயில்கள் சராசரியாக 38.19 கிமீ வேகத்தில் இயக்கப்படுவதாக தகவல்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே 31.12.2024 க்குள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களிலும் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் கடந்த 4 மாதங்களில் மதுரை கோட்டத்திற்கு ரூ. 414 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் ரயில்களில் 1.49 கோடி பயணிகள் பயணித்துள்ளனர் என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.