India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமங்கலம் புல்லமுத்தூர் பாபுராஜ் 29 திருவாரூர் போலீஸ்காரர் இவரது மனைவி தமிழ்ச்செல்வி 2021ல் திருமண நடந்தது. திருவாரூரில் போலீஸ் குடியிருப்பில் 2023 வரை வசித்தனர். குடும்பப் பிரச்சினையால் செந்தமிழ் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார் தன்னுடன் சேர்ந்து வாழ 5 பவுன் நகை வேண்டுமென பாபுராஜ் கேட்டதாக புகாரின் பேரில் நேற்று திருமங்கலம் மகளிர் போலீல் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
மதுரை அடுத்த பரவை ஏ.ஐ.பி.இ.ஏ. நகர் பி காலனியை சேர்ந்தவர்கள் குப்புசாமி(77)- பஞ்சவர்ணம் (72).இருவரும் தனது மகன் பாலசுந்தரத்துடன் வசித்து வந்தனர். வயதானதால் இருவரும் நோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை மோசமானதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கடிதம் எழுதி வைத்திருந்ததும் தெரியவந்தது.
திருமங்கலம், மேலூர் பகுதிகளில் ஒரு போக சாகுபடிக்கு செப்டம்பர் 15 க்கு முன்கூட்டியே வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசிற்கு பரிந்துரை செய்திட மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் திருமங்கலத்தில் 19,500 ஏக்கருக்கு, மேலூரில் 25,000 ஏக்கருக்கு பாசன வசதி பெறு முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய டிஜிட்டல் மயமாக்கலின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே, மதுரை கோட்டத்தில் 106 நிலையங்களில் 115 டிக்கெட் கவுண்டரில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்குவதற்கான QR குறியீடு கட்டண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரொக்கமில்லா பரிவர்த்தனையின் மூலம் ரயில்வே பயணிகளின் எளிமையான முறையில் டிக்கெட் பெறுவதை உறுதி செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறையினர் மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களில் 27 குளிர்பான தயாரிப்பு மற்றும் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் காலாவதியான 32 லிட்டர் குளிர்பானம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், விதியை மீறிய 10 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும், 7 கடைகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர்.
பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் 4 நாட்களில் பாலருவி பாசஞ்சர் இரயில் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும்.
மதுரையில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 17.08.2024, 19.08.2024 20.08.2024 சிறப்பு முகாம் நடைபெறுவதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் சேதமடைந்த ரோடுகளை சீரமைப்பது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் எம்.பி வெங்கடேசன் நேற்று திடீர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். எம்.பி வருகை குறித்து மேயர் இந்திராணிக்கு தகவல் தெரிவிக்காததால் அலுவலகத்திலிருந்த அவர் ஆய்வு பணிக்காக வெளியே சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டணியில் இருந்து கொண்டே மேயரிடம் தகவல் தெரிவிக்காமல் எம்பி தனி அரசியல் செய்வதாக மேயர் தரப்பில் புலம்பினர்.
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்களை வரும் 17, 19 20 ஆகிய மூன்று நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், எனவே பொதுமக்கள் நேரில் வந்து மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை வழங்கலாம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இத்தகவலை மறுத்துள்ள மதுரை மாவட்ட நிர்வாகம் இது தவறான தகவல் என விளக்கம் அளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.