Madurai

News August 21, 2024

சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதி

image

மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3.00 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள தகுதியுடையோர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 30 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News August 21, 2024

Grinder Gay ஆப்பிற்கு தடை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

image

2009 இல் தொடங்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான முதல் ஆப் ‘Grinder Gay App’ ஆகும். தற்போது இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான மொபைல் பயன்பாடாக மாறியுள்ளது. இந்தியாவில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் Grinder Gay App-ஐ தடை செய்ய, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (20.8) உத்தரவிட்டுள்ளது.

News August 21, 2024

வரி வசூல் நிதியிழப்பு விசாரிக்க விசாரணை குழு

image

மதுரை மாநகராட்சியில் ரூ.1 கோடியே 50 லட்சம் வரி வசூல் நிதியிழப்பு குறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 வருவாய் உதவியாளர்கள், மாநகராட்சி அலுவலர் சங்க பிரதிநிதிகள் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் பேச்சுவார்த்தை முடிவில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு விசாரிக்க மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

News August 20, 2024

தங்க ரதத்தில் முருகன் தெய்வானை உலா

image

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆவணி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகன் தெய்வானை தங்க ரதத்தில் புறப்பாடகி வீதியுலா நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த முருகன் தெய்வானையை பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News August 20, 2024

தலித் விடுதலை இயக்கம் சார்பில் புகார் மனு

image

தலித் விடுதலை இயக்கம் சார்பில் இன்று மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். அதில் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோருக்கு கடந்த பிப்.1 வரை மதுரை மாவட்டத்தில் 42 வழக்குகளில் 49 பேருக்கு ரூ.13 ஆயிரத்து 200 வழங்கப்பட்டது. இத்தொகை கடந்த பிப்.21 க்கு பின்பு ரூ.7500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த 6 மாதங்களாக பலருக்கும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தி வைத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

News August 20, 2024

மதுரையில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

image

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், விடுதிகளை மூட முயற்சிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தி ஆக. 24 அன்று செக்கானூரணியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய வருவாய் மாவட்டங்களின் அ.தி.மு.க. சார்பில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2024

தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பாராட்டு

image

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் இன்று(ஆக.20) நீதிபதி வழக்கு விசாரணையின் போது, ஆதரவற்ற, பாதிக்கப்பட்ட பெண் குழந்தை, மாணவிகள் பயன்பெறும் வகையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை பிரிவில் தமிழ்நாடு அரசு உணவு, உடை, சீருடை, கல்வி என அனைத்தும் வழங்குகிறது. இந்த திட்டம் மிகவும் பாராட்டத்தக்க திட்டம் என்று தமிழக அரசை பாராட்டினார்.

News August 20, 2024

தெருக்களை அடையாளம் காண உதவும் மேம்பால தூண்கள்

image

மதுரை நத்தம் மேம்பாலத்தில் மொத்தம் 268 பிரம்மாண்ட தூண்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு தூணையும் வரிசைப்படுத்தி சாலையில் செல்லக்கூடிய வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியக்கூடிய வகையில் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் செல்லும் சாலையின் இரு புறமும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு சாலைகள் பிரிவதால் இதில் குறிப்பிடப்பட்ட எண்கள் மூலம் எளிதில் அடையாளம் கண்டு செல்கின்றனர்.

News August 20, 2024

தபால் துறை பணியிடங்களுக்கான உத்தேசப் பட்டியல்

image

மதுரை தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. மதுரை தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 90 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்<<>>.

News August 19, 2024

4 சத்துணவு கூடங்களுக்கு ISO தரச்சான்று

image

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் அரசு உயர்நிலைப்பள்ளி, மாயாண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி, அரும்பனூர் ஒன்றிய துவக்கப்பள்ளி, மதுரை கோரிப்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களுக்கு ISO தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 100 சத்துணவு கூடங்களில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 4 சத்துணவு கூடங்கள் தேர்வாகியுள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

error: Content is protected !!