India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதால், ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை (செப்.9) மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மதுரை பைபாஸ் சாலை, அவனியாபுரம், மாசி வீதி, சுவாமி சன்னதி, வில்லாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை மாலை 4 மணி முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை பாம்பன் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (42). இவர் கடந்த 22 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவர் மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பயணத்திட்டத்தின் கீழ் “மதுரை மாவட்ட திவ்ய தேசம்” பெருமாள் கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவிற்கு சென்னை சுற்றுலா வளாக முன்பதிவு மையத்தில் நேரிலும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். அழகர் கோயில், ஒத்தகடை ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு அழைத்து செல்லப்படுவர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பயணத்திட்டத்தின் கீழ் “மதுரை மாவட்ட திவ்ய தேசம்” பெருமாள் கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவிற்கு சென்னை சுற்றுலா வளாக முன்பதிவு மையத்தில் நேரிலும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். அழகர் கோயில், ஒத்தகடை ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு அழைத்து செல்லப்படுவர்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள பட்டூர் அரசு நடுநிலை பள்ளியில் மாணவிகள் கழிவறை சுத்தம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா மாணவிகளை வீடியோ எடுத்து வெளியிட்டதாக தலைமை ஆசிரியர் பாப்பா தெரிவித்திருந்தார். இது குறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் விசாரித்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் பாப்பா இன்று(செப்.07) பணியிடை மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருமங்கலத்தைச் சேர்ந்த துளசி நாதன் இன்று(செப்.07) சர்வீஸ் சாலையில், தனது 6 வயது மகள் சஷ்டிகாவுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தந்தை, மகள் இருவர் மீதும் மோதியது. இதில் சஷ்டிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயங்களுடன் துளசி நாதன் மீட்கப்பட்டார். திருமங்கலம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
திருமங்கலம் சின்ன உலகாணியை சேர்ந்த ரியல் பால்பாண்டி அப்பகுதியில் 400-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பெற்று இரு மடங்கு பணத்தை அளிப்பதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கள்ளிக்குடி, ஆலங்குளம், கல்லணை, காரியாபட்டி பகுதி மக்கள் பணத்தை மீட்டு தர கோரி நேற்று திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மதுரை மேலூர் அருகே பட்டூர் நடுநிலைப் பள்ளியில் மாணவிகள் பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா உத்தரவின்பேரில் கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரி சாந்தி மற்றும் தொடக்கக் கல்வி அதிகாரி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் மதுரையிலிருந்து செப்.29, அக்.5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஜபல்பூர் சிறப்பு ரயில் (02121) மற்றும் ஜபல்பூரில் இருந்து செப்.26, அக்.3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை சிறப்பு ரயில் (02122) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மேலூரில் 6-ம் வகுப்பு பள்ளி மாணவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது ஒருவர் அந்த மாணவனை அழைத்து கழிப்பறையில் ஓரினச் சேர்க்கை கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவரின் தரப்பில் மேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரை கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.