India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10, 11, 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான, மாவட்ட அளவிலான கையெழுத்து போட்டி மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட அளவில் 2ம் பிடித்த வடக்கம்பட்டி கள்ளர் மேல் நிலைப்பள்ளி மாணவி தீத்திகாவை பாராட்டி மதுரை ஆட்சியர் இன்று(ஆக.21) சான்றிதழ் வழங்கினார்.
ஆக்கிரமிப்பு அகற்றல் அத்துமீறல் குறித்து கண்ணுச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நோட்டீஸ் வழங்க அதிகாரம் கொடுத்தது யார்? எந்த பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது? என கேட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் பசும்பொன் பாண்டியன் இன்று மதுரையில் பேசுகையில் “கலைஞரின் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை. இபிஎஸ்க்கு அரசியல் அங்கீகாரம் தந்த ஜெயலலிதாவுக்கு நாணயம் வெளியிட முன்வராதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கு குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று(ஆக.21) உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மதுரை மேலூரில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காலிப்பணியிடமாக இருந்து வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 57 கல்வி மாவட்ட அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை மாவட்டம் மேலூர் கல்வி அலுவலராக விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்த பி.இந்திரா இடமாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மாவட்ட கல்வி அலுவலராக (தனியார் பள்ளிகள்) சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை திருவாதவூர் அகதிகள் முகாமில் சுற்றுச்சுவர் இடிந்து பலியான 11வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்த தொடர்புடைய அரசு துறைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு. மேல்முறையீடு செய்ய கூச்சமாக இல்லைய எனவும் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதை ஏற்றுகொள்ள முடியாது எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மதுரையில் பள்ளி ஆண்டாய்வுகளில் அதிகாரிகள் விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களை பாதிக்கும் வகையில் இரவு வரை ஆய்வை நீட்டிக்கக்கூடாது’ என கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். அரசு, உதவிபெறும் பள்ளிகளில், மாவட்ட கல்வி அலுவலர்களின் பள்ளி ஆய்வுகளில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக புகார் எழுந்ததை அடுத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டை சீரமைக்க ரூ.3 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார் மதுரையின் கொடைவள்ளல் என அழைக்கப்படும் ‘வத்தல் தாத்தா’ டி.பி.ராஜேந்திரன். தமக்கு தொழிலையும், வாழ்வையும் கொடுத்த மதுரை மக்களுக்கே தனது ரூ.14 கோடி சொத்தையும் மக்களின் நல்வாழ்வுக்கும், மதுரை மாணவர்களின் கல்விக்கும் செலவு செய்துள்ள அவர் காய்கறி சந்தையின் தற்போதைய நிலையை அறிந்து நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி இவர் பள்ளி ஒன்றில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை சிறுமி தனியாகச் சென்ற போது வந்த வாலிபர் ஒருவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியதாக கூறப்படுகிறது. சிறுமி தரப்பு புகாரில் மகளிர் போலீசார் சொக்கலிங்கபுரம் செல்வம் 30 என்பவரை தேடி வருகின்றனர்.
மதுரை – போடி வழித்தடத்தில் நாளை (ஆக.22) மதியம் தண்டவாள உறுதி தன்மை கண்டறியும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த சோதனை ஓட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு 3 மணிக்கு போடியை சென்றடையும். மறுமார்க்கத்தில் போடியில் 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5மணிக்கு மதுரை வந்தடையும். எனவே பொதுமக்கள் இந்த நேரங்களில் ரயில்வே தண்டவாளங்களை கவனமாக கடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.