India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் இருந்து சண்டிகர் வரை இயக்கப்படும், (12688 ) “சண்டிகர் – மதுரை விரைவு ரயில்”, ஆகஸ்ட் 30, செப் 2, 6, 9, 13,16 ஆகிய தேதிகளில், சண்டிகரில் இருந்து மீரட் சிட்டி வழியாக இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செல்லும் காசியாபாத், டெல்லி நிஜாமுதீன், பரிதாபாத் மற்றும் அசோட்டி ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயங்காது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் நாளை வரை முன்பதிவு செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை மேலும் ஒரு வாரங்களுக்கு அதாவது வரும் 02.9.2024 வரை நீட்டித்து மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் நலன் ராஜா உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் அரசு பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்தனர். மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த தமிழ் வழியில் படித்த 532 பேர் ‘நீட்’ நுழைவுத் தேர்வு எழுதியதில் 162 பேர் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் தகுதி பெற்றனர். மாணவ மாணவியரின் நீட் வெற்றிக்கு உதவிய ஆசிரியர்களை சிஇஓ கார்த்திகா வாழ்த்தினார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் (TIIC) மதுரை கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 2024 ஆக.06. வரை நடைபெறுகிறது. இதில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25%, 35% முதலீட்டு மானியமாக அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய சிறையில் குற்ற வழக்கில் தண்டனை பெற்று வந்த தலை ஈஸ்வரன் என்ற சிறைக்கைதி சிறை வளாகத்திற்குள் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலை மீட்டு கைதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து சிறைத்துறை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்தாண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளர்கள் ஆகியோர் 5 பிரிவுகளில் 53 வகை விளையாட்டுகளில் பங்கேற்க www.sdat.tn.gov.in-ல் ஆக.25 வரை பதிவு செய்யலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே கொந்தகையை சேர்ந்த இளமாறன் விபத்தில் பலத்த காயமடைந்து மதுரை குருவிக்காரன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 18ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக ரூ.4.50 லட்சம் பெற்ற மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமலும் இளைஞரை பார்க்க விடாமல் இருந்த நிலையில், இளைஞர் இன்று மூளைச்சாவடைந்ததாக தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் வாழ்க்கை முறையை உயர்த்துவதில் பெரிய பங்கு பெண்களுடைய கல்வி என்பதால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து முதல்வர் ஆட்சி செய்து வருவதாக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இன்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய அளவில் உற்பத்தி தொழில் துறையில் செய்யும் பெண்களில் தமிழகத்தில் மட்டும் 42% பெண்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் பெருமைக்குரியது என்றார்.
மதுரை மாட்டுத்தாவணியில் இயங்கி வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் நிறுவனம், நாட்டின் 78வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில், 78 கல்லூரி மாணவர்களுக்கு இலவச வங்கி தேர்வு பயிற்சியை வழங்க உள்ளது. இப்பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு செப்.,1 காலை 11:00 மணிக்கு நிறுவன வளாகத்தில் நடத்தப்படும். அதில் தேர்வாகும் மாணவர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3 மாத காலம் இலவச பயிற்சி நேரடியாக நிறுவனத்தில் வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.