Madurai

News September 10, 2024

மதுரையில் பாரம்பரிய புட்டு திருவிழா

image

மதுரை இயற்கை சந்தை சார்பாக வரும் 15ஆம் தேதி பாரம்பரிய புட்டுத் திருவிழா நடைபெற உள்ளது. ஆவின் பஸ் ஸ்டாப் சிக்னல், கே.கே. நகர் பகுதியில் நடைபெற உள்ள கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட பாரம்பரிய புட்டு வகைகள் இடம்பெற உள்ளன. மேலும் இயற்கையில் விளைந்த காய்கறி, பாரம்பரிய அரிசிகள், பருப்புகள், தானியங்கள், நாட்டு விதைகள் இயற்கையான மதிப்பு கூட்டு பொருட்களும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

News September 10, 2024

மதுரையில் விரைவில் மரகத பூங்கா

image

மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் கருங்காலக்குடி வஞ்சிநகரத்தில் மரகத பூஞ்சோலை அமைய உள்ளது. தமிழகத்தில் 100 இடங்களில் 100 எக்டேரில் மரகத பூஞ்சோலை வகை காடுகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு வஞ்சிநகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு எக்டேர் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் முடிந்தபின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு அனுமதி கேட்டு வனத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட உள்ளது.

News September 10, 2024

கஞ்சா கடத்திய மதுரை உடற்பயிற்சி ஆசிரியர் கைது

image

சென்னையில் தனிப்படை போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் இருந்த போது சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த இளைஞர் வைத்திருந்த பையை சோதனையிட்டு அதிலிருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா், உசிலம்பட்டியைச் சோ்ந்த அரவிந்தசாமி என்பதும், மதுரையில் தனியாா் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றுவதும் தெரிய வந்தது. போலீசார் அரவிந்தசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 10, 2024

மகாவிஷ்ணு குறித்து முன்னாள் அமைச்சர் பேச்சு

image

திருமங்கலத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளி மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையும், எதிர்காலத்தில் நல்வழிகாட்டும் முறைகள் குறித்தும், அவர்களுடைய ஆற்றலை வலுப்படுத்தும் விதமாகவே பேச வேண்டும். இத்தகைய சர்ச்சைக்குரிய பேச்சுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும். மகாவிஷ்ணுவின் பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை. இதனை நாங்கள் ஆதரிக்கவில்லை என கூறினார்.

News September 10, 2024

பேரையூர் அருகே 8 உயிர்களை கொன்றவர் கைது

image

பேரையூர் அருகே பாப்புரெட்டியபட்டியை சேர்ந்த முத்துராஜன் (49) என்பவர் அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். செங்கல் அறுக்கும் பணியின் போது ஈர செங்கல் மீது நாய்கள் ஏறி நடந்து ஓடுவதால் பணிகள் பாதிப்படைந்ததாக கூறி, முத்துராஜன் மாமிச குடலில் விஷம் வைத்து, அதை சாப்பிட்ட 8 நாய்கள் உயிரிழந்தன. இதுகுறித்த மாரியப்பன் என்பவர் புகாரில் போலீசார் முத்துராஜனை நேற்று கைது செய்தனர்.

News September 10, 2024

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் உதயநிதி ஆய்வு

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (செப்.9) மதுரையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அரசு துறை சார்ந்த அலுவலர்களுடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அரசு திட்டங்களின் நிலை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர்கள், ஆட்சியர், அனைத்து துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 10, 2024

மேலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம்

image

மேலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் இன்றிரவு மேலூர் சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டது. முன்னதாக நடைபெற்ற கூட்டத்திற்கு மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகிக்க, மாவட்ட பொது செயலாளர் கண்ணன், புறநகர் மாவட்ட தலைவர் குருஜி வரவேற்றனர். முன்னாள் மத்திய இணைஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு ஆற்றினர். விநாயகர் ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்று குளத்தில் கலைக்கப்பட்டது.

News September 9, 2024

மத்திய சிறையை இடமாற்றம் செய்வது அவசியம் – ஐகோர்ட்

image

மதுரை மத்திய சிறைச்சாலையை மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (செப்.9) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுரை மத்திய சிறைச்சாலையை மாற்ற வேண்டியிருந்தது மிகவும் அவசியமானது. எனவே, 6 மாதங்களுக்குள் புதிய சிறைச்சாலை கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

News September 9, 2024

மதுரை புத்தக திருவிழாவில் ராமர் பெயர் நீக்கம்

image

மதுரை புத்தக திருவிழாவில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து நகைச்சுவை நடிகர் ராமர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் புத்தக திருவிழாவில் பங்கேற்பது தொடர்பாக ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து நிலவி வந்த நிலையில் அவரது படம் இருந்த பேனரும் பெயரும் இன்று மறைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 9, 2024

Way2News எதிரொலி – நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

image

மேலூர் நகராட்சியின் நொண்டிகோவில் பட்டியில் மீனாட்சி மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் உள்ள கம்பர் சாலையில் ரோட்டோரம் குப்பை கழிவுகள் கொட்டப்படுவது குறித்து நேற்று Way2News-இல் செய்தி வெளியானது. இந்த செய்தி மேலூர் நகராட்சி அலுவலர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் எடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பதிவிட்டனர். இதையடுத்து இன்று (செப்.9) நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவ்விடத்தில் உள்ள குப்பைகளை அகற்றினர்.

error: Content is protected !!