India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானையின் பெயர் பார்வதி. 28 வயதுடைய பார்வதிக்கு என்று தனி குளியல் தொட்டியும் உள்ளது. இப்படியெல்லாம் மதுரை மக்களின் பிரியத்துக்குரிய பார்வதிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வயிற்றுப் போக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள யானை பார்வதிக்கு, கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மதுரை: அரசு துறைகளில் 2327 பணியிடங்களை நிரப்ப மதுரை மாவட்டத்தில் செப்.14ம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வு, 146 மையங்களில் 42000 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு ஏற்பாடுகளை கவனிக்க 5 துணை கலெக்டர்கள், 40க்கும் மேற்பட்ட தாசில்தார்கள், 146க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹால்டிக்கெட்டை தேர்வாளர்கள் www.tnpsc.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதுரை விமான நிலையம் அக்டோபருக்குள் 24 மணி நேர சேவையை வழங்க உள்ளது. இந்த சேவைக்காக இரவு நேர விமானங்களுக்கான இரவு நேர ஒதுக்கீட்டு பட்டியல் கேட்டு இந்திய விமான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் மதுரையில் இருந்து அதிகாலை 12 மணிக்கு மலேசியா கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையை மையமாக கொண்டு இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரில் இந்நிறுவன இயக்குநர்கள், துணை நிறுவன இயக்குநர்கள் என 128 பேர் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று (செப்.10) ஒத்தக்கடையைச் சேர்ந்த நியோமேக்ஸ் துணை நிறுவன இயக்குனர் சரவணசுந்தரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தடகள போட்டிகள் வரும் 20ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் பொதுப்பிரிவு கிரிக்கெட் போட்டிகள் 14 & 15 தேதிக்கு பதில் 19 & 20ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்படும் என மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா அறிவித்துள்ளார்.
அமமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை நேற்று(செப்.10) வெளியிட்ட அறிக்கையில், பொது செயலாளர், TTV தினகரன், இம்மானுவேல் சேகரன் 67ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார். இன்று(செப்.11) காலை 10 மணிக்கு மதுரை ஹெரிடேஜ் ஹோட்டலில் இருந்து பரமக்குடி செல்ல உள்ளார். மாநில, மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் ஹோட்டலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா இன்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளாக மதுரையில் பணியாற்றி வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே மதுரைக்கு இதுவரை புதிய மாவட்ட கல்வி அலுவலர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து நேற்று(செப்.11) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுகாதார ஆய்வாளர் மற்றும் உள்ளிட்ட 4 பேரிடம் காணப்பட்ட தொய்வான நடவடிக்கைகள் காரணமாக 4 பேரை பணியிடை மாற்றம் செய்து அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் இருந்து வரும் 25, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் (22671) ரயில் அதற்கு மாறாக காலை 7.40 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக மதுரையிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ( 22672) அதற்கு பதிலாக மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு, நூல்கள், ஆய்விதழ்கள், இதழ்கள், பிரெயில் படைப்புகள், கையெழுத்துப்படிகள், மின்நூல்கள் என 3.5 லட்சம் நூல்கள் உள்ளன. நூலகம் திறக்கப்பட்டு கடந்த 13 மாதங்களில் அதிகபட்சமாக 11 லட்சம் பேர் சென்று பார்வையிட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.