India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழர்களின் வீர விளையாட்டுக்களை அடையாளப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் சிலம்பம் விளையாட்டு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைகளை சுற்றி தடுப்புகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மர்ம நபர்கள் இரவு நேரங்களில் சிலைகளை சேதப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரை வந்திருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியலுக்கு வரக் கூடாது என நடிகர் விஜய்யை தடுக்க முடியாது, விஜய்யை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் கைகளில் உள்ளது.
விஜய்யின் மாநாட்டுக்கு இடையூறு செய்யக் கூடாது, விஜய் மாநாட்டுக்கு கடும் கட்டுபாடுகளை விதிக்கக் கூடாது. விஜய் அரசியல் களத்திற்கு வரட்டும், அவரை நேரில் சந்திக்கலாம்” என்றார்.
ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவுக்கு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவில் நாள்தோறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா நடைபெறும். இன்று(செப்.12) தங்கப்பல்லக்கில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி ஆவணி மூல வீதியில் உலா வந்தனர். வீதி உலாவின் போது வழிநெடுகிளும் திரளான பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டனர்.
வார இறுதி நாட்கள் மிலாடி நபி வருவதை முன்னிட்டு வரும் செப் 13 மற்றும் 14ம் தேதிகளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 110 பேருந்துகளும், 15 முதல் 17 ஆகிய 3 நாட்கள் மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு 150 பேருந்துகள் ஏகப்பட்ட உள்ளதாக போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் அறிவித்துள்ளது.
மதுரை கட்ராபாளையம் விசாகா மகளிர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், தீ விபத்து ஏற்பட்ட மகளிர் விடுதியின் பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்துவிழும் அபாயகரமான நிலையில் உள்ளதால் கட்டிடத்தை ஒரு வாரத்திற்குள் இடித்து அகற்ற கடந்த 13.10.2023 அன்று கட்டிட உரிமையாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியும் அலட்சியமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. முகாமில் 30-க்கு மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று கல்வித்தகுதிக்கேற்ப வேலை தேடுவோர்களை தோ்வு செய்கின்றனா். www.tnprivatejobs.tn.gov.in இணையத்தில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என வேலைவாய்ப்பு துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வரும் 14ம் தேதி குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத் திருவிழாவில் இன்று(செப்.11) “தாருகாவனத்து ரிஷிகளின் மனைவிகளுக்கு சுந்தீரேஸ்வரர் வளையல் வியாபாரியாக வந்து கைகளைத் தொட்டு வளையல் அணிவிக்க அவர்களும் சாபம் நீங்கி சிவலோகம் செல்லும் “வளையல் விற்ற லீலை” வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுந்தரேஸ்வரர் வளையல் விற்ற லீலையில் முக்கிய வீதிகளில் வீதி உலா நடைபெற்றது.
மதுரையைச் சேர்ந்த நிதி நிறுவனமான நியோமேக்ஸ், அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ. 5000 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று(செப்.11) இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ” நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் ” என்று உத்தரவிட்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானையின் பெயர் பார்வதி. 28 வயதுடைய பார்வதிக்கு என்று தனி குளியல் தொட்டியும் உள்ளது. இப்படியெல்லாம் மதுரை மக்களின் பிரியத்துக்குரிய பார்வதிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வயிற்றுப் போக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள யானை பார்வதிக்கு, கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.